""அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குபங்சர் போன்ற மருத்துவமுறைகளை சேர்ந்ததுதான் ரெய்கி மருத்துவமும். இதன் தாயகம் ஜப்பான் நாடாகும். மருந்து மாத்திரைகள் ஏதுமின்றி தொடு முறை சிகிச்சையின் மூலம் உடலில் உள்ள எப்படிப்பட்ட நோயையும் இதன் மூலம் குணப்படுத்திவிடலாம். 18ஆம் நூற்றாண்டில் மகா குரு மிக்காயூசுயி என்பவர் மூலம் ரெய்கி மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது. ரெய்கி என்பதில் ரெய் என்கிற ஜப்பானிய சொல்லுக்கு பிரபஞ்சம் என்று பொருள். "கி' என்றால் சக்தி, சக்தியால் குணப்படுத்துதல். அதாவது நம்மைக் சுற்றியுள்ள பிரபஞ்ச சக்திதான் மின்காந்த அலை. அதை முறையாக பயன்படுத்தி நோயைக் குணப்படுத்துவதே ரெய்கி முறையாகும்.