அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

முகப்பரு மறைய சில எளிய வழிகள்!

பெண்களின் முக அழகைக் கெடுக்கும் பருக்கள் மறைய மஞ்சள் கிழங்கை நன்றாக இடித்து நல்லெண்ணெய்யில் வதக்கி, பரு உள்ள இடத்தில் இளம் சூட்டில் தடவி வந்தால் மறையும்.

News image
Updated On :17 மே 2015, 6:22 am

ரிஷி

அழகுக் குறிப்புகள்

பெண்களின் முக அழகைக் கெடுக்கும் பருக்கள் மறைய மஞ்சள் கிழங்கை நன்றாக இடித்து நல்லெண்ணெய்யில் வதக்கி, பரு உள்ள இடத்தில் இளம் சூட்டில் தடவி வந்தால் மறையும்.

நல்லெண்ணெய்யை முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால், நல்ல பயன் பெறலாம்.

கொழுந்து வேப்பிலையை எடுத்து, அரைத்து பருக்களின் மீது தடவி வர, பருக்கள் மறையும்.

உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி கரும்புள்ளிகள் மீது தடவி வந்தால் அவை மறையும்.

இளநீரில் சிறிது மஞ்சள் தூளைக் கலந்து முகத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

சந்தனக் கட்டையை இழைத்து, அக்கலவையுடன் ஜாதிக்காய் சேர்த்து அரைத்து, முகத்தில் பூச, பருக்கள் மறைந்துவிடும்.

நான்கு தேக்கரண்டி வெள்ளரிச் சாற்றோடு ஒரு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் சாற்றையும் கலந்து முகத்தில் தடவி வர, பருக்கள் மறையும்.

சந்தனத்தை அரைத்தவுடனேயே முகத்தில் பரு மற்றும் கரும்புள்ளிகளில் தடவி விடுவதும் நல்லது. கடையில் விற்கும் சந்தன வில்லைகளை இதற்குப் பயன்படுத்தக்கூடாது.

பரு உள்ள இடங்களில் லேசாக அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பைப் பொறுத்துக் கொண்டு சொறியாமல் விரல் நகங்களால் நிரடாமல் இருந்தால், கரும்புள்ளிகள் ஏற்படாது. பருக்களை அழுத்தி தேய்ப்பது, பிதுக்குவது போன்றவற்றால் பருக்களில் உள்ள வெண்மையான கொழுப்பு வெளியேறி அந்த இடம் கரும்புள்ளிகளாக, வடுவாகி விடும். பரு உள்ள இடத்தில் தேய்க்காமல் பிதுக்காமல் விட்டுவிட்டால், தானே கொழுப்பு சமநிலை பெற்றுச் சரியாகிவிடும். ஆகவே பருவை நிரடாதீர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.