தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வரகுப் பொங்கல்

வெறும் கடாயில் பயற்றம் பருப்பை லேசாக சிவக்கும் வரை வறுக்கவும். அடுப்பை அணை

News image
Updated On :22 ஜூன் 2015, 10:36 am

தேவையானவை:

வரகரிசி - 1 கப், பயத்தம் பருப்பு - 1/2 கப், தண்ணீர் - 4 கப், பச்சை மிளகாய் - 5 ( பொடியாக நறுக்கியது), இஞ்சி - ஒரு சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது), உப்பு - தேவையான அளவு, நெய்யும் எண்ணெய்யுமாக சேர்த்து - கால் கப், கடுகு - 1 சிட்டிகை, உளுந்தம் பருப்பு - 1/2 , முந்திரி - 8, சீரகம் - 1/4 தேவைக்கேற்ப, மிளகு 1/2 தேவைக்கேற்ப, கறிவேப்பிலை சிறிது.

செய்முறை:

வெறும் கடாயில் பயற்றம் பருப்பை லேசாக சிவக்கும் வரை வறுக்கவும். அடுப்பை அணைத்து அந்தச் சூட்டில் வரகரிசியைப் போட்டு வறுக்கவும். அதை இருமுறை கழுவி 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 6 விசில் வரும் வரை வேக வைக்கவும். வாணலியில் நெய்யும் எண்ணெய்யும் சேர்த்து சூடாக்கி, கடுகு, உளுந்தம் பருப்பு, முந்திரி, பச்சைமிளகாய், இஞ்சி, சீரகம், மிளகு, கறிவேப்பிலை தாளித்து பொங்கலை சேர்த்து நன்றாக மசித்து உப்பு சேர்த்து கிளறவும். சூடான வரகு பொங்கல் ரெடி.

தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். (4 மிளகை சிறிது பொடித்து சேர்த்தால் மணமும் காரமும் கூடும். குக்கரில் நேரடியாக வைப்பதைவிட ஒரு பாத்திரத்தில் பொங்கலை வேக வைத்தால் அடிபிடிப்பதை தவிர்க்கலாம்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.