நெ.து.சுந்தரவடிவேலு பணியில் இருந்தபோது அவரது தந்தை துரைசாமியிடமிருந்து ஒரு சிபாரிசுக் கடிதம் பெற்று வந்து இளைஞன் ஒருவன் கொடுத்தான். அதனைப் படித்தவர் அதில் அவ்விளைஞனை ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்க்கும்படி எழுதியிருந்ததைக் கண்டு அவர் "துரைசாமிக்கோ, அவரது மகனுக்கோ சொந்தமானது அல்ல. அரசுக்குச் சொந்தமான பயிற்சிப் பள்ளி என்று போய் கடிதம் கொடுத்தவரிடம் சொல்லு' என்று கோபமாகக் கூறி அவ்விளைஞனைத் திருப்பி அனுப்பி விட்டாராம்.
-மெர்வின் எழுதிய "உழைப்போம் உயர்வோம்' நூலிலிருந்து.