மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இங்கும் ஒரு கீழடி!

இந்த மலையில் உள்ளது கொழுந்தீஸ்வரர் கோயில். இது 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது.

News image
Updated On :2 நவம்பர் 2019, 6:30 pm

கொ.மா.கோதண்டம்

இந்த மலையில் உள்ளது கொழுந்தீஸ்வரர் கோயில். இது 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. இங்கே யாழி சிங்கம் போன்ற சிலைகள் பல உள்ளன. குகைக் கோயிலாகவும் உள்ளன.  பலப்பல கல்வெட்டுக்கள் உள்ளன. குலசேகர பாண்டிய மன்னர் காலக் கோயில் என்றும் கூறப்படுகிறது.

இங்குள்ள கல்வெட்டுகள் ஆய்வுக்குரியவை. மலைக்கு கிழக்குப் பகுதி வெட்ட வெளிப்பகுதி. இங்கு எங்குப் பார்த்தாலும் முதுமக்கள் தாழிகள் உள்ளன. இதில் பொன் நாணயங்கள் இருப்பதாக வதந்தி பரவ பலர் பல இடங்களை தோண்டிபார்த்து முதுமக்கள் தாழிகளை உடைத்து பார்த்துள்ளனர். 

எங்கும் முதுமக்கள் தாழிகள் உடைந்து காணப்படுகின்றன. மனித எலும்புகள் மண் பாத்திரங்கள் உடைந்த ஓட்டாஞ்சில்லுகள் எங்கும் சிதறி உள்ளன. தங்கச் காசுகள் ரோமாபுரி நாணயங்களும் கிடைத்துள்ளதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

ஆயிரத்துககும் மேற்பட்ட தாழிகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. கையால் மண்ணை தோண்டினாலே தாழியின் வாய்ப்பகுதி தெரிகிறது.
அண்மையில் ஓரிடத்தில் வெண்கல மனித உருவத்தில் கால் பகுதி கிடைத்து உள்ளதாகவும் தற்போது கோயில் பாதுகாப்பாளர்  வீட்டில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோயிலில் தங்கப்பல்லக்கு இருந்ததாகவும் கொள்ளையர்கள் பல்லக்கை எடுத்துச் செல்ல திட்டமிட்டதை அறிந்தவர்கள் மண்ணில் தோண்டி புதைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்காகவே பல வருடங்கள் தோண்டிப் பார்க்கப்பட்டதாக தெரிகிறது. 

அரசும் ஆய்வாளர்களும் கல்வெட்டுக்களை ஆய்வு செய்யவும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழர் வாழ்வை தெரிந்து கொள்ளவும் இப்பகுதியை ஆய்வு செய்ய வேண்டும். இதனால் பல சரித்திர செய்திகள் தெரிய வரும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.