மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

விஜய் வழியில் ரசிகர்கள்! 

கரோனா பொது முடக்க நேரத்தில் பல சினிமா பிரபலங்கள்  "கிரீன் இந்தியா' சேலஞ்சில் மரக்கன்றுகளை நட்டு அந்தப் புகைப்படங்களை தங்களது  சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2020, 12:30 am

DIN


கரோனா பொது முடக்க நேரத்தில் பல சினிமா பிரபலங்கள்  "கிரீன் இந்தியா' சேலஞ்சில் மரக்கன்றுகளை நட்டு அந்தப் புகைப்படங்களை தங்களது  சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபு, சில தினங்களுக்கு முன் தனது பிறந்த நாளை முன்னிட்டு இந்த சவாலில் மரக்கன்றுகளை நட்டு புகைப்படங்களை  தன் சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்தார் .மேலும் இந்த சவாலை நடிகர் விஜய் , ஜூனியர் என். டி. ஆர், மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரையும் செய்யுமாறு தன் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். விஜய்  அவரது வீட்டுத் தோட்டத்தில் செடி நட்டு அந்த புகைப்படத்தை சுட்டுரையில் பகிர்ந்துள்ளார்.

அதில் "மகேஷ் பாபு இது உங்களுக்காக. பசுமையான இந்தியா உருவாக்குவோம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'  என ட்வீட் செய்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள மகேஷ் பாபு " சவாலை ஏற்று செய்ததற்கு மிகவும்  நன்றி விஜய் ப்ரோ ! பத்திரமாக இருங்கள்'  என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். இதனை விஜய் மக்கள் இயக்கம் வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.