தற்போது, எத்தியோப்பியாவைச் சேர்ந்த கலைஞர்களின் பார் சாகசம், பஞ்சவர்ணக்கிளிகளை வைத்து ரஷ்ய கலைஞர்கள் நிகழ்ச்சி, ஆப்பிரிக்கர்களின் சாகச சைக்கிள் நிகழ்ச்சி போன்ற புதிய வடிவிலான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், பார்வையாளர்களின் எண்ணிக்கை இதனால் சற்று உயர்ந்துள்ளது. ஆனால், தற்போது சர்க்கஸ் போடுவதற்கு இடம் கிடைப்பதுதான் பெரும் பிரச்னையாக உள்ளது. சென்னை உள்பட பெருநகரங்களில் இருந்த காலி இடங்கள் பெரும்பாலும் கட்டடங்களாக மாறிவிட்டன. குறிப்பாக சென்னையில் சென்ட்ரல் ரயில்நிலையத்துக்குப் பின்புறம் உள்ள ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தில் இதுவரை சர்க்கஸ் போட்டுவந்தோம். ஆனால், அங்கு அலுவலகம் கட்ட ரயில்வே நிர்வாகம் முடிவுசெய்துள்ளதால், இனி வரும் காலங்களில் அங்கு சர்க்கஸ் போட முடியாது. சர்க்கஸ் கூடாரம் அமைக்கக் குறைந்தது 12,000 சதுர அடியாவது தேவைப்படும். பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்தும் இடம் தேவை. அந்த அளவுக்குக் காலி இடம் சென்னைக்குள் இல்லை. தீவுத்திடல், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் சர்க்கஸூக்கு இடம் தருவதில்லை. அநேகமாக சென்னையில் நடைபெறும் கடைசி சர்க்கஸ் இதுவாகக் கூட இருக்கலாம். சர்க்கஸூக்கு இடம் அளிப்பது குறித்துத் தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.