நறுமணப் பொருள்

உலகின் பல்வேறு பகுதிகளில் சுமார் 70 வகையான நறுமணப் பொருள்கள் விளைகின்றன. இவைகளில் பல நம் நாட்டிலும் விளைகின்றன. 
நறுமணப் பொருள்
Updated on
1 min read

உலகின் பல்வேறு பகுதிகளில் சுமார் 70 வகையான நறுமணப் பொருள்கள் விளைகின்றன. இவைகளில் பல நம் நாட்டிலும் விளைகின்றன. 

நறுமண சரக்குகள் ஒரு செடியின் பல்வேறு பாகங்களாக இருக்கலாம்:

மலர்ப்பகுதி-கிராம்பு, குங்குமப்பூ பழங்கள்- ஏலக்காய், மிளகாய் சதைக்கனிகள்-கருமிளகு விதைகள்- சோம்பு, கொத்துமல்லி
தண்டுக்கிழங்குகள்-இஞ்சி, மஞ்சள்
இலைகள்- மருவு, புதினா
பருப்புகள்- ஜாதிக்காய்
விதையலகுகள்-ஜாதிபத்திரி
பட்டைகள்- லவங்கப்பட்டை
பூண்டுகள்-வெள்ளைப் பூண்டு, வெங்காயம்

அந்த காலத்தில் ஒரு மூட்டை மிளகு, ஒரு மனிதனின் உயிருக்கு சமமாக மதிப்பிடப்பட்டது.

மிளகு தனித்தனி மணிகளாக எண்ணப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

இவற்றினால் தான் ஐரோப்பிய நாடுகளான போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் ஆகியவை நறுமண பொருட்கள் விளையும் நாடுகளை கைப்பற்ற துடித்தன. இந்தியாவில் மிளகு, ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், மிளகாய் ஆகியவை மிக முக்கியமானவை.

இதில் மிளகை "நறுமணப் பொருள்களின் மன்னன்' என அழைத்தனர். அத்துடன் இந்தியாவின் "கரும் பொன்' என்ற பெரும் உண்டு. 

ஏலக்காயை "நறுமணப் பொருள்களின் ராணி'  என அழைத்தனர். 

கிராம்பின் ஆங்கிலப் பெயர் ஸ்ரீப்ர்ஸ்ங். இதற்கு ஆணி என்று  பொருள். கிராம்பு ஆணி போன்ற அமைப்பை பெற்றிருப்பதால் இந்த பெயராம். 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் விறுவிறுப்பு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com