ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன்

தமிழிலும், தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இவரது நடிப்புக்கு தமிழைவிட தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 1:44 am IST

தமிழிலும், தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இவரது நடிப்புக்கு தமிழைவிட தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதையடுத்து தெலுங்கில் படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஸ்ருதிஹாசன் தற்போது, பிரஷாந்த் நீல் இயக்கும் "சலார்' படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பெண் பத்திரிகையாளராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கவிருப்பதாக தெலுங்கு படவுலகில் தகவல் ஒன்று பரவி வருகிறது. "பல்பு', "கிராக்' போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய கோபிசந்த் மாலினேனி சமீபத்தில் ஸ்ருதி ஹாசனை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் ஸ்ருதிஹாசன், 60 வயதாகும் பாலகிருஷ்ணாவுடன் எவ்வாறு நடிப்பார் என கேள்வி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.