அம்பேத்கரும் பரோடா மன்னரும்..!

பரோடா மன்னர் சாயாஜி ராவ் கெய்வாட் 3-இன் வாழ்க்கையை எழுதி நூலாக வெளியிட விரும்பினார் அம்பேத்கர்.  
அம்பேத்கரும் பரோடா மன்னரும்..!
Updated on
1 min read


பரோடா மன்னர் சாயாஜி ராவ் கெய்வாட் 3-இன் வாழ்க்கையை எழுதி நூலாக வெளியிட விரும்பினார் அம்பேத்கர்.

மும்பை எல்பின்ஸ்டன் கல்லூரியில் படித்தபோது, மாதம்தோறும் ரூ.25-ஐ அம்பேத்
கருக்கு மன்னர் அனுப்பியுள்ளார். பிறகு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தங்கி, பட்டமேற்படிப்பு படித்தபோதும் மாதம் 11.5 டாலர் அனுப்பியுள்ளார். அடுத்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளியியல் படித்தபோதும், அம்பேத்கருக்கு மன்னர்உதவியாக இருந்தார். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக, மன்னரின் வாழ்க்கை வரலாற்றை எழுத அம்பேத்கர் விரும்பினார்.

""மன்னர்தான் எனக்கு உயர்கல்வியை அளித்து, பொதுவாழ்வில் நான் வகிக்கும் இடத்தை அடைய செய்தவர்' என்றார் அம்பேத்கர். நூல் எழுதும் விருப்பம் நிறைவேறவில்லை.

தற்போது பரோடாவில் சாயாஜி ராவ் கெய்வாட் 3-இன் நினைவகம் உருவாகி வருகிறது. அது நிறைவு பெறும் நிலையிலும் உள்ளது.

பெண்கள் கல்வி, தீண்டாமை ஒழிப்பு, விதவைகள் மறுமணம் உள்ளிட்டவற்றில் மன்னர் அக்கறை காட்டியதும் நினைவு கூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com