டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

மாணவர்களிடம் தமிழ்..!

பள்ளி மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்க்கவும்,  அவர்களுக்கு தமிழ் மீதான நேசத்தைத் தூண்டவும்  அளப்பரிய பணிகளைச் செய்து வருகிறது கருங்கல் தமிழ்ச் சங்கம்.

News image
Updated On :28 அக்டோபர் 2023, 8:19 pm IST


பள்ளி மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்க்கவும், அவர்களுக்கு தமிழ் மீதான நேசத்தைத் தூண்டவும் அளப்பரிய பணிகளைச் செய்து வருகிறது கருங்கல் தமிழ்ச் சங்கம்.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட கருங்கல்லில் இயங்கிவரும் இந்தச் சங்கத் தலைவரான கப்பியறை ராயப்பன், ஓய்வு பெற்ற கல்வியியல் கல்லூரி முதல்வராவார்.

எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர்.. என பன்முகத்தன்மை கொண்ட இவர், தன் எழுபத்து ஏழு வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிவருபவர்.

இதுவரை 8 நூல்களை எழுதியிருக்கும் அவர், தற்போது 4 நூல்களை எழுதி நிறைவு செய்துள்ளார்.

அவரிடம் பேசியபோது:

'பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைஆங்கிலப் பள்ளிகளில் சேர்த்தாலும், தாய் மொழி மட்டுமே சிறந்த சிந்தனைகளை குழந்தைகளிடம் வளர்க்கும். அதற்காகவே பள்ளிகளின் விடுமுறை நாள்களில் இலவசமாக தூய தமிழ்ப் பயிற்சியை கருங்கல் தமிழ் சங்கம் வழியே நடத்திவருகிறோம். தமிழை பிழையின்றி எழுதும் பயிற்சி இதில் நடத்தப்படும்.

பள்ளிகள், கல்லூரிகளுக்கும் நேரடியாகச் சென்று தமிழ் சார்ந்த போட்டிகளை நடத்திபரிசுகளை வழங்கி ஊக்குவிக்கின்றோம்.

திருக்குறள் போட்டிகளை மாணவர்களுக்கு நடத்தி "திருக்குறள் திலகம்' எனும் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறோம்.

பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற 500 மாணவ, மாணவிகளுக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டினோம். மாணவர்கள் மத்தியிலும், அடுத்த தலைமுறையினர் மத்தியிலும் தமிழின் பெருமையை விதைக்க கிடைத்த வாய்ப்பை வாழ்நாள் பாக்கியமாகவே கருதுகிறேன்.

"ஆசிரியர் சிகரம்', "பாரதி பைந்தமிழ்ச்சுடர்', "சிறந்த சமூக சேவகர்', "இலக்கியச் செல்வர்' உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றாலும், மாணவர்களிடம் தமிழ் வளர்ப்பதில் உள்ளசந்தோஷம் எதிலும் இல்லை'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.