ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

நாமே தவறு செய்யலாமா..?

ஒருசமயம் பொதுக் கூட்டம் ஒன்றுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது,  சென்னை வால்டாக்ஸ் சாலையின் கடைசியில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டியவாறு காமராஜரின் கார் வலதுபுறம் திரும்ப முயன்றது.

News image
Updated On :24 செப்டம்பர் 2023, 12:23 pm

ஒருசமயம் பொதுக் கூட்டம் ஒன்றுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது,  சென்னை வால்டாக்ஸ் சாலையின் கடைசியில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டியவாறு காமராஜரின் கார் வலதுபுறம் திரும்ப முயன்றது.  அப்போது ஓட்டுநரிடம் காமராஜர், ""ஏம்பா... இப்படி திரும்பறே? வழக்கம்போல அந்தப் பக்கம் போய்விட்டு திரும்பி வாயேன்..'' என்றார் கண்டிப்புடன்.

கார் உடனே இடதுபுறம் திரும்பி மெமொரியல் ஹால் வரையில் சென்று அரசு பொது மருத்துவமனையை ஒட்டியவாறு வலதுபுறம் திரும்பிவர ஆரம்பித்தது. 

போக்குவரத்து விதிமுறையின்படி,  அப்படித்தான் வர வேண்டும். ஆனால் காரில் இருந்த  ஒருவர், "" இரவு 10 மணிக்கு மேல் போக்குவரத்து குறையும். அதனால் கடைசி வரை போய் திரும்பி வர வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது'' என்றார்.
""நிர்பந்தம் இல்லை என்பதால் இரவில் போய் பழகிவிட்டால் இதே பழக்கம்தானே பகலிலும் வரும்.  நம்ம காரே இப்படி முறை தவறிப் போனால் அதைப் பார்த்து மற்றவர்களுக்கு அதிகமாகச் செய்யத் தோன்றாதா?'' என்று காமராஜர் கடுமையாகச் சொன்னார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.