கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பெரிய ஆலமரம்..

உலகின் மிகப் பெரிய ஆலமரம்: 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம்

Published On :

மூன்றரை ஏக்கர் நிலத்தில் ஒரு பிரமாண்ட ஆலமரம் "உலகின் மிகப் பெரிய ஆலமரம்' என்ற பெருமையைப் பெற்றுள்ளது. தாய் மரத்தின் வயது இருநூற்று ஐம்பது ஆண்டுகள் என்பதோடு, அதன் உயரம் 24.5 மீ. (74 அடி) ஆகும். பருமன் (சுற்றளவு) ஐம்பது அடி. இந்த மரம் கொல்கத்தாவுடன் இணைந்திருக்கும் ஹவுராவின் ஷிவ்பூர் தாவரவியல் பூங்காவில்தான் உள்ளது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது, இந்தப் பூங்கா "ராயல் இந்தியன் பொட்டானிக்கல் கார்டன்' என்று அழைக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்ததும் "இந்தியத் தாவரவியல் பூங்கா' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2009 லிருந்து புகழ்பெற்ற தாவரயியல் விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திரபோஸின் நினைவாக , "ஆச்சார்யா ஜெகதீஷ் சந்திரபோஸ் தாவரவியல் பூங்கா' என அழைக்கப்படுகிறது. பூங்காவில் ஒரு பகுதியில் "வங்க அறிவியல், பொறியியல் பல்கலைக்கழகம்' செயல்படுகிறது.

ஆண்டு முழுவதும் குளிரூட்டப்பட்ட சூழல் குடியிருக்கும் இந்தப் பூங்காவில் உலகப் புகழ் பெற்ற புராதன ஆலமரக் குடும்பத்துடன் 1,400 இனங்களைச் சேர்ந்த அரிய மரங்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன.

ஹவுராவின் மிகப் பெரிய ஆலமரக் குடும்பம் போல புதுச்சேரி ஆரோவில் வளாகத்திலும் குட்டி ஆல மரக் குடும்பம் பெரிய ஆல மரக் குடும்பமாக விரிவாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஒரு ஆலமரத்தின் விழுதுகள் மண்ணில் ஊன்றி இன்னொரு ஆலமரமாகும். இப்படி பல ஆலமரங்கள் விழுதுகள் மூலமாகத் தோன்றி, சங்கிலித் தொடராகப் பெரிய தோப்பாகும். அதனால்தான் தமிழர்கள் திருமணங்களின் போது புதுமணத்தம்பதியின் குடும்பம் " ஆல் போல் தழைக்க..' என பெரியவர்கள் வாழ்த்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.