சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வெப் தொடருக்கு வரவேற்பு

18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ள வெப் தொடர் 'சட்டமும் நீதியும்'.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2025, 12:21 am IST

18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ள வெப் தொடர் 'சட்டமும் நீதியும்'. இந்தத் தொடருக்கு ரசிகர்களின் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

ஜீ 5 தளத்தில் வெளியான வேகத்தில் 51 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழ் வெளியீட்டைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் இந்தத் தொடர் மொழி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து தயாரிப்பாளர் பிரபாகரன் பேசும் போது...'இந்த வெற்றியை ஒரு குழுவின் வெற்றியாகத்தான் பார்க்கிறேன். ரசிகர்களும் ஊடகங்களும் இந்த முழு வெப் சீரிûஸ, எங்கேயோ எடுத்துச் சென்றுவிட்டார்கள்.

இப்போது தெலுங்கு, ஹிந்தியிலும் இது மொழி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. நடிகர் சரவணன் நாங்கள் கேட்டதை விடப் பல மடங்கு செய்து தந்துவிட்டார். அவருக்கு நன்றி. மற்ற நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இந்த வெற்றிக்கு ஆதரவாக இருந்த ஜீ 5 ஓடிடி தளத்துக்கு நன்றி. சின்னதாக ஆரம்பித்ததை மிகப்பெரிய படைப்பாக மாற்றிய அனைவருக்கும் நன்றி' என்றார்.

நடிகர் சரவணன் பேசும் போது...' 1990 களில் நான் ஹீரோவாக வந்த போது, மக்கள் தந்த ஆதரவு. இப்போது எனக்கிருப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தத் தொடரின் வெற்றியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் தயாரிப்பாளர் பிரபாகரனுக்கும் அவரது குழுவினருக்கும் நன்றி. என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி.

இப்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இது மொழி, செய்யப்பட்டு கொண்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. பெரும் வெற்றியைத் தந்த ரசிகர்களுக்கு நன்றி' என்றார் சரவணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.