திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தமிழ்ச் செல்வங்கள்: தமிழ் - 5

உலகில் உள்ளவற்றை எல்லாம் மூன்றே சொற்களில் அடக்க வேண்டும்! முடியுமா? "முடியும்' என்றார் ஒருவர்; அவர் பெயர் மெய்கண்டார்! தமிழுக்கு வரம்பு கண்ட தகவாளர்; முந்தையர் அறிவுச் சுரப்பை முழுதறிந்த பேராளர்! அதனைப் பின்னே முழுவதாகக் கண்டு விரித்து விரித்து உரைத்த சீராளர் பாவாணர்.

News image
Updated On :7 டிசம்பர் 2013, 8:29 pm

உலகில் உள்ளவற்றை எல்லாம் மூன்றே சொற்களில் அடக்க வேண்டும்! முடியுமா? "முடியும்' என்றார் ஒருவர்; அவர் பெயர் மெய்கண்டார்! தமிழுக்கு வரம்பு கண்ட தகவாளர்; முந்தையர் அறிவுச் சுரப்பை முழுதறிந்த பேராளர்! அதனைப் பின்னே முழுவதாகக் கண்டு விரித்து விரித்து உரைத்த சீராளர் பாவாணர்.

மூன்றே சொற்களில் சொல்லலாம் என்றால், அவை எவை? அவை: ""அவன், அவள், அது'' என்பவை. (சிவஞானபோதம்-1) இச் சுட்டில் அடங்காதவை எவை? அவர், அவை இவற்றின் கூட்டம்தானே!

பாவாணர் நூல், "சுட்டு விளக்கம்' முதலாயவை.

தமிழ் எழுத்துகள் வண்ணம் (இசை) ஆவது எப்படி?

""வல்லிசை வண்ணம் வல்லெழுத்து பயிலும்'' ......................... தொல். 1472

""மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே'' .................... தொல். 1473

""இயைபு வண்ணம் இடை எழுத்து மிகுமே'' .......................... தொல். 1474

""அளபெடை வண்ணம் அளபெடை பயிலும்'' ..................... தொல். 1475

""நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும்'' ................. தொல். 1476

""குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும்'' ...................... தொல். 1477

""சித்திர வண்ணம், நெடியவும் குறியவும் நேர்ந்துடன் வருமே'' தொல். 1478

""நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும்'' ....................................... தொல். 1479

""உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும்'' ............................. தொல். 1488

""முருகு வண்ணம், அடியிறந் தோடி அதனோ ரற்றே''................. தொல். 1489

இவையே, பாவகைகளின் ஊற்றுக்கண்கள்! வாரம், வரி, வண்ணம், சந்தம், சிந்து, கும்மி ஆயவற்றுக்கு மடைதிறந்த வெள்ளம்! சீர்த்தளை எனும் கீர்த்தனைப் பாடல்களுக்கு அருவிக் கொழிப்பு! இனித் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலோ கூத்துலகக் குடியிருப்பு. சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரை, அரும் பொருள் ஆசிரியர் உரை கூத்தின் கொள்கலம்!

அழிந்து போனவை அளவிடற் கரியவை என்றாலும், இருப்பவற்றைப் போற்றினாலும் முத்தமிழ் முழக்கம் முழுதுறக் கேட்கலாம்!

""யானை படுத்தாலும் ஆட்டுக்குச் சிறிதாகாது'' என்பது தமிழ்ப் பழமொழி.

தொடர்வோம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.