மண்ணாயினும் கொண்டு வீசுமினே!
பன்னிரு ஆழ்வார்களுள் நம்மாழ்வாரை, வைணவ மறைக்கு "முதல் தாய்' என்பர். நம்மாழ்வார் தம்மைத் தலைவியாகப் பாவித்து, ("நாயக-நாயகி' பாவத்தில்) பெருமாள் மீது காதல் கொண்டு பாடியவர். வெண்ணிலவு, குளிர் தென்றல், மயக்கும் மாலைப்பொழுது, இனிக்கும் இரவு ஆகியவை தலைவிக்குக் காதல் நோயைப் பெருக்கும் தன்மையுடையவையாகும்.










