கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

பழமொழி நானூறு - முன்றுறையரையனார்

உண்டாகி  வளர்ந்த அழகிய உயர்ந்த பனைமரத்தை, அதன் பழத்தைப் பெறுவதற்கு விரும்பி அடைந்து இரவெல்லாம் அதனடியிலே காத்துக் கிடந்தாலும்

News image
Updated On :6 ஜூன் 2021, 4:40 am


செல்வம் ஊழால் அமைவது

ஆஅய் வளர்ந்த அணிநெடும் பெண்ணையை
ஏஎய் இரவெல்லாம் காத்தலும் - வாஅய்ப்
படற்பாலார் கண்ணே படுமே; பொறியும்
தொடற்பாலார் கண்ணே தொடும். (பாடல்-205)

உண்டாகி  வளர்ந்த அழகிய உயர்ந்த பனைமரத்தை, அதன் பழத்தைப் பெறுவதற்கு விரும்பி அடைந்து இரவெல்லாம் அதனடியிலே காத்துக் கிடந்தாலும், தம் வாயினிடத்தே படுதற்குரிய நல்ல ஊழ் உள்ளவரிடத்திலேயே அந்தப் பனம் பழம் கிடைக்கும். 

அதுபோலவே, இலக்குமியும் (செல்வம்) சென்று தீண்டுதற்கு உரியவரிடத்திலேயே சென்று தீண்டுவாள். செல்வம் முயற்சியால் மட்டும் வராது; முன்வினைப் பயனாக நல்ல ஊழும் வேண்டும். "பொறியும் தொடற்பாலார் கண்ணே தொடும்' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.