/

பழமொழி நானூறு - முன்றுறையரையனார்

மதித்துச் சொல்லப்படுகின்ற பேரறிவு உடையவர்களிடத்தும் குறைபாடுகள் காணப்பட்டால் அதற்குக் காரணம், அவர்களின் முன்வினைப் பயன் வந்து பொருந்தியதன் வகையாகவே செயல்கள் நிகழ்வதால் என்க.

News image
Updated On :23 மே 2021, 5:06 am

ஊழ்வினையால் அமைவதே செயல்
சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும்
பட்ட இழுக்கம் பலவானால் - பட்ட
பொறியின்வகைய கருமம் அதனால்
அறிவினை ஊழே அடும்.   (பாடல்-203)

மதித்துச் சொல்லப்படுகின்ற பேரறிவு உடையவர்களிடத்தும் குறைபாடுகள் காணப்பட்டால் அதற்குக் காரணம், அவர்களின் முன்வினைப் பயன் வந்து பொருந்தியதன் வகையாகவே செயல்கள் நிகழ்வதால் என்க.

அதனால், அவருடைய நல்ல அறிவையும்கூட ஊழ்வினை கெடுத்துவிடும். "அறிவினை ஊழே அடும்' என்பது பழமொழி. "பொறியின் வகைய கருமம்' என்பதையும் ஒரு பழமொழியாகக் கருதலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.