மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

 பிறருக்குத் துன்பம் செய்தல்

புனங்களிலே விளங்கும் பொன்போன்ற மகரந்தங்களைச் சொரிந்து கொண்டிருக்கும் பூங்கொம்பைப் போன்ற அழகுத் தேமல்களை உடையவளே!

News image
Updated On :7 ஆகஸ்ட் 2022, 9:47 am

தினமணி

பழமொழி நானூறு
 வினைப்பயன் ஒன்றின்றி வேற்றுமை கொண்டு
 நினைத்துப் பிறர்பணியச் செய்யாமை வேண்டும்
 புனப்பொன் அவிர்சுணங்கின் பூங்கொம்பர் அன்னாய்!
 தனக்கின்னா இன்னா பிறர்க்கு. (பா.266)
 புனங்களிலே விளங்கும் பொன்போன்ற மகரந்தங்களைச் சொரிந்து கொண்டிருக்கும் பூங்கொம்பைப் போன்ற அழகுத் தேமல்களை உடையவளே! நினக்குத் துன்பம் தருவதாக இருப்பது பிறருக்கும் துன்பம் தருவதே என்பதை அறிவாயாக. அதனால், செயலின் பயன் ஒன்றேனும் இல்லாமல், மன வேற்றுமை ஒன்றையே உள்ளத்திலே கொண்டு, அதனையே நினைத்து நினைத்துப் பிறர் துயரம் கொள்ளும் செயல்களைச் செய்யாமல் இருக்க வேண்டும். "தனக்கின்னா இன்னா பிறர்க்கு' என்பது பழமொழி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.