தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

புனத்து இடங்களிலே, கோட்டான் கூப்பிட்டுக் கொண்டிருக்கும் குளிர்ந்த மலைகளை உடைய நாடனே!

News image
Updated On :20 மார்ச் 2022, 11:43 am

தினமணி

நினைத்த இதுவென்றந் நீர்மையே நோக்கி
மனத்தது அறிந்தீவார் மாண்டார்-புனத்த 
குடிஞை இரட்டும் குளிர்வரை நாட!
கடிஞையில் கல்லிடுவார் இல்.  (பாடல்-126)


புனத்து இடங்களிலே, கோட்டான் கூப்பிட்டுக் கொண்டிருக்கும் குளிர்ந்த மலைகளை உடைய நாடனே! ஒருவன் பிச்சை எடுத்து உண்ணும் ஓட்டிலே போய்க் கல்லைக் போடுபவர்கள் உலகில் எவரும் இல்லை; ஆனால், அறிவினாலே மாட்சிமை உடைய சான்றோர்களோ, தம்மிடத்தே இரந்து வருபவர் "தம் உள்ளத்திலே எண்ணியது இது' என்று அவருடைய தன்மை யையே ஆராய்ந்து பார்த்து, அவர் மனத்திலுள்ளதை அறிந்து, அதற்கேற்பக் கொடுத்து உதவுபவராகவே இருப்பார்கள். "கடிஞையில் கல்லிடுவார் இல்' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.