

தம்மால் முடிவதைத் தாம் ஆற்றிச் செய்கலார்,
பின்னை, ஒருவரால் செய்வித்தும் என்று இருத்தல்
செல் நீர் அருவி மலைநாட - பாய்பவோ,
வெந்நீரும் ஆடாதார் தீ? (பாடல்: 293)
ஓடிவரும் அருவியை உடைய மலைநாடனே! தாமே செய்து முடிக்க வேண்டியவற்றைச் செய்து முடிக்காது, இன்னொருவரால் அச்செயலைச் செய்து முடிப்போம் என்று இருப்போர், செய்திறன் அற்றோர் ஆவர். அருகு இருக்கும் வெந்நீரிலேயே குளிக்க அஞ்சுபவர் தீயில் பாய்வாரா? மாட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.