பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

ஒருவன் உணராது, உடன்று எழுந்த போருள்,இருவரிடை நட்பான் புக்கால், பெரியவெறுப்பினால் பேர்த்துச் செறுப்பின், தலையுள்குறுக் கண்ணி ஆகிவிடும். 
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்


ஒருவன் உணராது, உடன்று எழுந்த போருள்,
இருவரிடை நட்பான் புக்கால், பெரிய
வெறுப்பினால் பேர்த்துச் செறுப்பின், தலையுள்
குறுக் கண்ணி ஆகிவிடும்.  (பாடல்: 294)

இருவர் ஒருவர்மேல் ஒருவர் பகைகொண்டு சண்டை போட்டுக் கொண்டு இருக்கும்போது அவர்களைத் தடுத்து இருவரிடையே சமாதானம் செய்ய முயன்றும் கேளாது அவர்கள் மீண்டும் தமக்குள் சண்டையிடத் தொடங்குவார் ஆயின் அது வலிமை வாய்ந்த காளையின் கூரிய கொம்புகளின் இடையே கட்டப்பட்ட சிறிய கயிற்றைச் சரிசெய்ய இயலாதது போன்றது ஆகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com