பலர் கூடி நிற்கும் பகை வலிது
ஒன்னார் அடநின்ற போழ்தின், ஒரு மகன்
தன்னை எனைத்தும் வியவற்க துன்னினார்
நன்மை இலராய்விடினும், நனி பலர் ஆம்
பன்மையின் பாடு உடையது இல். (பாடல்: 306)
பகைவர்கள் போர்மேல் வந்தபோது அவனை எதிர்த்து நிற்கும் தலைவன் தனிமைப்பட்டுத் தன்னைத்தானே செருக்கி நிற்றல் கூடாது. போருக்கு வந்தவர் நல்லவர் அல்லர் என்றாலும் மிகப் பலராய் இருத்தல் கூடும். பலராகக் கூடி இருத்தலே ஒரு பலம் ஆகும்.