இல்லம், இளமை, எழில், வனப்பு, மீக்கூற்றம்,
செல்வம், வலி, யென் றிவையெல்லாம்,}மெல்ல
நிலையாமை கண்டு, நெடியார், துறப்பர்
தலையாயார் தாமுய்யக் கொண்டு.
( பாடல் 53 அதிகாரம்: துறவு )
இல்லத்திலிருந்து மனையாளோடும் வாழ்வதாகிய மனை வாழ்க்கை, அந்த வாழ்வினைத் துய்த்து இன்புறுகின்ற இளமைப் பருவம், சமூகத்திலே ஏற்படுகின்ற செல்வாக்கு, உடலின் வலிமை எனப்படுகின்ற இவை எல்லாம் நிலைத்திராமையை அமைதியாக ஆராய்ந்து பார்த்து மேலோர்கள், தாங்கள் பிறவித் துன்பங்களினின்றும் கடைத் தேறுவதற்கான வழிகளை மேற்கொள்ளுதலில் காலத்தை நீட்டியாதவராக, இளமையிலேயே உலகப் பற்றினை துறந்து விடுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

'டெக் நெக்' என்பது என்ன? யாருக்கெல்லாம் இந்த பாதிப்பு ஏற்படும்?

கணினி வேலை செய்வோர் மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் ஏற்படும் பாதிப்பு! ஏன்?

அரக்கோணத்தில் நிரந்தரமாக தங்கி கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்: விசிக வேட்பாளா் எழில்கரோலின்

இயற்கை எழில் கொஞ்சும் வால்பாறை!
வீடியோக்கள்

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை


