மானமே அணிகலன்

ஈனத்தனமான காரியங்களைச் செய்து இந்த உடலைப் போற்றிவந்த போதிலும், இந்த உடலானது, தன்பால் உறுதிசேரப் பெற்றதாகி, நீடித்த காலம் நிலைத்து நிற்பதென்று சொல்ல முடியாது.
மானமே அணிகலன்
Updated on
1 min read

மான அருங்கலம் நீக்கி, இரவென்னும்

ஈன இளிவினால் வாழ்வேன்மன்-ஈனத்தால்

ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்து இவ்வுடம்பு

நீட்டித்து நிற்கும் எனின்

(பாடல் 40 அதிகாரம்: அறன் வலியுறுத்தல்)

ஈனத்தனமான காரியங்களைச் செய்து இந்த உடலைப் போற்றிவந்த போதிலும், இந்த உடலானது, தன்பால் உறுதிசேரப் பெற்றதாகி, நீடித்த காலம் நிலைத்து நிற்பதென்று சொல்ல முடியாது.

அப்படி நிலைத்திருக்குமானால், மானம் என்று சொல்லப்படும் அருமையான அணிகலனை ஒதுக்கி விட்டு, இரப்பது என்று சொல்லுகின்ற தாழ்மையான மானக் கேட்டுக்கு உட்பட்டும், பெரும்பாலும் யானும் வாழ்வேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com