உயிர்போயார் வெண்தலை உட்கச் சிரித்துச்,
செயிர்தீர்க்கும், செம்மாப் பவரைச்;-செயிர்தீர்ந்தார்
கண்டு, 'இற்றிதன் வண்ணம்' என்பதனால்,
பண்டத்துள் வைப்பது இலர்.
(பாடல் 50 அதிகாரம்: தூய்து அன்மை)
உயிர் போய்விட்டவர்களுடைய வெண்மையான தலை எலும்புகள், பிறர் அச்சம் கொள்ளும்படியாகச் சிரித்துச் செம்மாந்து, உடலின்பத்திலே மூழ்கியிருப்பவரின் இறுமாப்பாகிய குற்றத்தைத் தீர்க்கும்.
ஆதலால், அப்படிக் குற்றம் தீர்ந்தவர்கள் 'இதன் குணம் இப்படிப்பட்டது' என அறிந்து உடலைப்பற்றித் தெரிந்து கொள்வதனால், தம் உடலை ஒரு பொருளாகக் கருதிப் பேணிப் புனைந்துவைக்க மாட்டார்கள்.
'உடலின் தன்மையை அவர்கள் உணர்ந்து விடுவதனால் அதனை ஒரு பொருளாகக் கருதி, அதன் சுகபோகங்களிலே மனஞ்செலுத்த மாட்டார்கள்.'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெளியேறியது இந்திய மகளிர் அணி

தோ் சக்கரத்துக்கு வண்ணம்!

பிஞ்சுக் கை வண்ணம்!
தோல்வியைக் கண்டு அச்சமில்லை: சீமான்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


