சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுகபோகங்களில் மனஞ்செலுத்த மாட்டார்

உயிர் போய்விட்டவர்களுடைய வெண்மையான தலை எலும்புகள், பிறர் அச்சம் கொள்ளும்படியாகச் சிரித்துச் செம்மாந்து, உடலின்பத்திலே மூழ்கியிருப்பவரின் இறுமாப்பாகிய குற்றத்தைத் தீர்க்கும்.

News image
Updated On :15 மார்ச் 2026, 2:59 pm

தினமணி செய்திச் சேவை

உயிர்போயார் வெண்தலை உட்கச் சிரித்துச்,

செயிர்தீர்க்கும், செம்மாப் பவரைச்;-செயிர்தீர்ந்தார்

கண்டு, 'இற்றிதன் வண்ணம்' என்பதனால்,

பண்டத்துள் வைப்பது இலர்.

(பாடல் 50 அதிகாரம்: தூய்து அன்மை)

உயிர் போய்விட்டவர்களுடைய வெண்மையான தலை எலும்புகள், பிறர் அச்சம் கொள்ளும்படியாகச் சிரித்துச் செம்மாந்து, உடலின்பத்திலே மூழ்கியிருப்பவரின் இறுமாப்பாகிய குற்றத்தைத் தீர்க்கும்.

ஆதலால், அப்படிக் குற்றம் தீர்ந்தவர்கள் 'இதன் குணம் இப்படிப்பட்டது' என அறிந்து உடலைப்பற்றித் தெரிந்து கொள்வதனால், தம் உடலை ஒரு பொருளாகக் கருதிப் பேணிப் புனைந்துவைக்க மாட்டார்கள்.

'உடலின் தன்மையை அவர்கள் உணர்ந்து விடுவதனால் அதனை ஒரு பொருளாகக் கருதி, அதன் சுகபோகங்களிலே மனஞ்செலுத்த மாட்டார்கள்.'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.