திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் தனி சந்நிதியில் அருள்புரிகிறார் ஸ்ரீசனீஸ்வர பகவான்.
நள சக்கரவர்த்தி, தன்னைப் பிடித்திருந்த சனியிலிருந்து விடுபடுவதற்காக திருநள்ளாறு வந்தார். அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, பிரதான தெய்வமாக அருள் பாலிக்கும் ஸ்ரீ தர்பாரண்யேசுவரரை வழிபட்டார். இதன்பின் சனி விலகியதாக வரலாறு. இந்தக் காரணத்தால் திருநள்ளாற்றில் உள்ள தீர்த்தத்துக்கு நள தீர்த்தம் என்ற பெயரும் ஏற்பட்டது.
உக்ர மூர்த்தியாகிய சனி பகவான் இக்கோயிலில் அனுக்ரக மூர்த்தியாக, கிழக்கு நோக்கி, அபய முத்திரையுடன் அருள் பாலிக்கிறார். சனி பகவானுக்கு காகமே வாகனம். இக்கோயிலில் தங்கக் காக வாகனம் உள்ளது. சனிப்பெயர்ச்சி விழாவின்போது ஸ்ரீ சனீஸ்வர பகவான் தங்கக் காக வாகனத்தில் வீற்றிருந்தவாறு பக்தர்களுக்கு அருள் தருகிறார்.
வருகிற டிச.21 காலை 7.51 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. தகவலுக்கு: 04368-236530.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மைசூரு மகாராஜா கல்லூரி திடலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!

பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக மூடப்படுகிறது; மீறினால் தாக்குவோம்! ஈரான் அறிவிப்பு!







