கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

பொவுறுமா திருபுவனம்?

பாபநாசம் தாலுகாவின் தென்பகுதியில், தஞ்சையிலிருந்து நாகைக்கு செல்லும் புகைவண்டிப் பாதையிலுள்ள சாலியமங்கலம் என்னும் ஊருக்கு தெற்கே உள்ளது திருபுவனம். இன்று சிற்றூராகக் காட்சி தரும் இவ்வூர் 12ஆம் நூற்றாண

Published On :

பாபநாசம் தாலுகாவின் தென்பகுதியில், தஞ்சையிலிருந்து நாகைக்கு செல்லும் புகைவண்டிப் பாதையிலுள்ள சாலியமங்கலம் என்னும் ஊருக்கு தெற்கே உள்ளது திருபுவனம்.

இன்று சிற்றூராகக் காட்சி தரும் இவ்வூர் 12ஆம் நூற்றாண்டுகளில் சிறந்த நகரமாகத் திகழ்ந்துள்ளது. இவ்வூரின் வடக்கே வீரசோழ வடவாறும் தெற்கே பரவை ஏரியும் உள்ளன. நாட்டுப் பாடல்களில் இவ்வூர் எண்பது வீதிகளைக் கொண்டது என்று பதிவாகியுள்ளது. கல்வெட்டில் "திரிபுவன வீரபுரம்' என்று இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளது.

திருபுவனம் பெருநகரமாக இருந்தபோது வீரசோழ வடவாற்றின் கரையில் சிவன் கோயிலும், ஊரின் நடுவே திருமால் கோயிலும், தெற்கே ஐயனார், பிடாரி கோயில்களும் இருந்திருக்கின்றன. இவை இன்று முழு வடிவில் காணக் கிடைக்கவில்லை. சிவன் கோயில் சிதைவுண்டு புதைந்துகிடக்கிறது. திருமால் கோட்டம் இருந்த இடம் என்பதற்கு சான்றாக திருச்சுற்று மதிற்சுவரில் சில பகுதிகளும், கருவறையின் அடித்தளமும் எஞ்சி நிற்கின்றன.

திருமால், திருமகள் விக்ரகங்கள் புதைந்து சீர் கெட்டுக் கிடந்ததைக் கண்ட ஊரார், சில ஆண்டுகளுக்கு முன்னர் அத்திருமேனிகளை எடுத்து கோயில் திருமுற்றத்திலேயே கீற்றுக் கொட்டகையிட்டு அமைத்தனர். கீற்றுக் கொட்டகை தற்போது மங்களூர் ஓடாக மாற்றம் பெற்றிருக்கிறது.

மங்களூர் ஓடு போட்ட கொட்டகைக்குள் ஒன்பதடி அளவில் நெடிதாக அரிதுயில் கொண்டுள்ள பெருமாள் திருமேனியும், நான்கடி அளவில் அமர்ந்த நிலையிலுள்ள திருமகள் திருமேனியும் சிற்பத்தால் சிறந்து உயிர்ப்புடன் விளங்குகின்றன. இச்சிதைந்த கோயிலுக்குள் கிடந்த நரசிங்கமூர்த்தி, இராமபிரான், சீதா பிராட்டியார் ஆகிய தெய்வத் திருமேனிகளுடன், நம்மாழ்வார், இராமானுஜர், இரண்டு சேனை முதல்வர்கள் ஆகியோருடைய படிமங்களும் ஒரு சேர எடுக்கப்பட்டு மூலவருடனேயே வைக்கப்பட்டுள்ளனர். கொட்டகைக்குள் இறைவன் குடியிருக்கும் நிலை மாறி திருபுவனம் புதிய பொலிவு பெற வேண்டும் என்பதே பக்தர்களின் விருப்பம்.

மேலும் தகவலுக்கு 99408 27384.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.