திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குரங்குகள் பூச்சாத்தி வழிபடும் தலம்!

கைகளில் பூக்களை எடுத்துக் கொண்டு மனிதர்கள் கோயிலுக்குச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு ஆலயத்தில் குரங்குகள் வழிபடச் செல்கின்றன. அதிசயம்தான் இது.

News image
Updated On :1 நவம்பர் 2012, 8:16 am

கைகளில் பூக்களை எடுத்துக் கொண்டு மனிதர்கள் கோயிலுக்குச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு ஆலயத்தில் குரங்குகள் வழிபடச் செல்கின்றன. அதிசயம்தான் இது.

திருவெறும்பூரில் எறும்புகள் இறைவனை வழிபட்டன. ஆனைக்காவில் யானை வழிபட்டது. இங்கோ குரங்குகள் இறைவனை வழிபடுகின்றன.

ஆம். திருக்குரக்காவல் என்ற திருத்தலத்தில் அருளாட்சி செய்துவரும் இறைவனுக்குத் தனித்தன்மையுண்டு. இந்த சிவபெருமான் அடியார்கள் விரும்பிய வரமெல்லாம் அளித்து பெருமை சேர்க்கிறார். வரம் கேட்காமலே இந்த சிவபெருமான் தம்மை வணங்கி நிற்கும் பக்தர்களின் மன ஆசைகளை நிறைவேற்றி அருள்கிறார்.

இந்த ஈசனை அனுமன் வழிபட்டுத் தரிசனம் கண்டிருக்கிறார். இதை நினைவு படுத்தும் வகையில், ஆண்டுக்கு ஒரு முறை குரங்குக் கூட்டங்கள் இத்திருத்தலம் வந்து இறைவனை வழிபட்டு பூச்சாற்றிவிட்டு வணங்கிச் செல்கின்றன. வரும் போது பூக்களை ஏந்திவந்து குரங்குகள் பிரார்த்தனை செய்து செல்வது இன்றும் அதிசயச் செயலாக நடந்து வருகிறது. இத்திருத்தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.