கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

இளமையும் முதுமையும்

இவ்வுலகில் நாம் வாழ தாயின் கருவறையில் நம்மைப் படைத்த இறைவன், இங்கிருந்து மண்ணறை செல்லவும் செய்கின்றான்.

Updated On :21 நவம்பர் 2013, 4:14 pm IST

இவ்வுலகில் நாம் வாழ தாயின் கருவறையில் நம்மைப் படைத்த இறைவன், இங்கிருந்து மண்ணறை செல்லவும் செய்கின்றான்.

"எதையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலையில், அல்லாஹ் உங்களை - உங்களுடைய தாய்மார்களின் வயிறுகளிலிருந்து வெளியாக்கினான். இன்னும் உங்களுக்கு செவிப் புலனையும், பார்வையையும், இதயத்தையும் அமைத்தான், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக''(அல்குர் ஆன்: 16:78).

"நாம் பிறக்கும்போது நமக்குப் பல் இல்லை. சுயமாக எங்கும் செல்ல இயலாது. உடல் வலி,வேதனை,நோய் போன்றவை ஏற்பட்டால் அழத்தான் முடியும். எந்த உணவு ஜீரணிக்குமோ அந்த உணவே கொடுக்கப்பட்டது. பிறரால் ஊட்டப்பட்டோம்.

அல்லாஹ் - அவன் எத்தகையவன் என்றால் (ஆரம்பத்தில்) பலவீனத்திலிருந்து உங்களை அவன் படைத்தான். பலவீனத்திற்குப்பின் (உங்களுக்கு) சக்தியை உண்டாக்கினான். மீண்டும் பலவீனத்தையும் (முதுமையின்)நரையையும் உண்டாக்கினான். தான் விரும்பியதைப் படைக்கிறான், அவன் முற்றிலும் அறிந்தவன் - சக்தியுள்ளவன் (அல்குர் ஆன்:30:54)''.

அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ள அனைத்தும் நமக்கு நிச்சயம் நடைபெற உள்ளது. அதன் பெயர்தான் முதுமை. நாற்பது வயதை எட்டிய பின் முதுமை ஆரம்பமாகிறது. முதலில் நாம் இழப்பது பற்களைத்தான். அடுத்து பார்வையின் சக்தி குறைய ஆரம்பித்துவிடும். கேட்கும் செவித்திறனும் குறைந்து செவிட்டுத்தனம் ஆரம்பமாகும். முழங்காலில் வலி ஏற்பட்டு உட்கார்ந்தால் எழ முடியாது. எழுந்தால் உட்கார முடியாது. பிறகு ஞாபக சக்தி குறைந்து மறதி உண்டாகும். தலைமுடி வெண்மையாக மாறும்.

டை (கறுப்புச் சாயம்) அடிப்பவன் மரணத்தை தொட்டுவிட்ட ஏமாளி. இளமையோ, வயதையோ மீட்க முடியாது என்பதை விளங்கிக்கொள்ளுங்கள்.

"எவரோ மரணம் அடைந்துவிட்டால் அழுகிற ஒருவர், தனது மரணத்திற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்டுக் கொள்ளட்டும்'' என இரண்டாம் உமர்(ரலி) கூறியுள்ளார்.

இளமையில் நற்செயலின்றி கழித்தவர்கள் முதுமையிலும் அவ்வாறிருப்பது நல்லதல்ல. உலக ஆசாபாசங்களை குறைத்துக்கொண்டு மண்ணறைக்குத் தேவையான தயாரிப்புகளை செய்து கொள்வதே அறிவுடமையாகும். எனவே, இளமையிலும் முதுமையிலும் அல்லாஹ் இரசூல் கூற்றின்படி நடந்து சுவன பதியை அடைவோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.