வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

அன்பே டயானா படக்குழுவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு!

அன்பே டயானா படக்குழுவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு...

News image

அன்பே டயானா படக்குழுவைப் பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்... - Instagram/million dollars

Updated On :16 ஜூலை 2026, 9:00 pm IST

இயக்குநர் பாரி இளவழகனின் “அன்பே டயானா” திரைப்படக்குழுவை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

ஜமா திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி நாயகனாக நடித்துள்ள புதிய படம் “அன்பே டயானா”.

மில்லியன் டாலர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை (ஜூலை 17) திரையரங்குகளில் வெளியாகின்றது. மேலும், இந்தப் படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், அன்பே டயானா திரைப்படத்தை இன்று பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, படக்குழு வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,

“நீங்கள் உயர்வாகக் கருதும் ஒருவரிடமிருந்து மனமார்ந்த பாராட்டைப் பெறுவதை விடச் சிறந்த வெகுமதி வேறு எதுவும் இல்லை” எனக் கூறப்பட்டுள்ளது.

நடிகர்கள் ரம்யா ரங்கநாதன், சேத்தன், ரோஜா, பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்னை பெரம்பூரில் நடக்கும் காதல் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

Summary

Actor Sivakarthikeyan has appreciated the team behind Director Pari Ilavazhagan's film "Anbe Diana".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.