குழந்தை தன் தாயாரைப் பார்த்து, ""அம்மா, எனக்குத் தூக்கம் வருகிறது; தூங்கப் போகிறேன்; எனக்கு பசிக்கும் நேரத்தில் என்னை எழுப்பி விடு'' என்றது. ""குழந்தாய், அதற்கு அவசியமில்லை; அந்தப் பசியே உன்னை எழுப்பிவிடும்'' என்று தாய் சொன்னாள். இப்படித்தான், ஒவ்வொருவரையும் அவர்களுக்குள்ளேயே இருக்கிற "ஆன்ம ஞான வேட்கை' அவர்களை எழுப்பிவிடும்; வெளியே இருந்து யாரும் எதுவும் செய்ய வேண்டியதில்லை.