சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாம​ணி ​நா​க​நா​த​ரும் சிம்ம தட்சி​ணா​மூர்த்​தி​யும்

சுக்ல முனி​வர் தினந்​தோ​றும்  சிவ​பெ​ரு​மானை வழி​பட்டு வந்​தார். தான் வளர்த்த காம​தே​னு​வின் பாலைக் கொண்டு சிவ​பெ​ரு​மா​னுக்கு அபி​ஷே​கம் செய்து வந்​தார்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2020, 12:30 am

ஆர்.​அ​னு​ராதா

சுக்ல முனி​வர் தினந்​தோ​றும்  சிவ​பெ​ரு​மானை வழி​பட்டு வந்​தார். தான் வளர்த்த காம​தே​னு​வின் பாலைக் கொண்டு சிவ​பெ​ரு​மா​னுக்கு அபி​ஷே​கம் செய்து வந்​தார். ஒரு​நாள் காம​தேனு வனத்​துக்​குச் சென்று மண்ணால் ஆன சுயம்பு சிவ​லிங்​கத்​தின் மீது  பால் சொரி​வ​தைக் கண்டு கோபித்து காம​தே​னுவை அடித்​தார் முனி​வர். காம​தேனு ஓடிச்​சென்று  அங்​கி​ருந்த சிவ​லிங்​கத்​தின் மீது முட்டி தனக்கு நேர்ந்த நிலையை உணர்த்​திய பின்​னர், அரு​கில்  உள்ள  பசு​பதி தீர்த்​தத்​தில் விழுந்து இறந்​தது.  இறை​வன் காட்சித் தந்து பசுவை உயிர்ப்​பித்​தார். 

காம​தேனு முட்டி​ய​தால் மூலத்​தி​ரு​மேனி மூன்று வடுக்​க​ளைப் பெற்​றுக் காட்சி அளித்​தது. பாம​ணி​யில் முப்​பி​ரி​வா​கப் பிளந்த சுயம்​பு​லிங்​கத்தை செப்​புத் தகட்​டால் ஒன்​றாக இணைத்து வழி​ப​டப்​ப​டு​கி​றது.

அஷ்ட நாகங்​க​ளுக்​கும், ராகு-​கே​து​விற்​கும் தலை​வ​னான ஆதி​சே​ஷன் மனித முகம், பாம்பு உட​லு​டன் பாமணி நாக​நா​தரை  பூஜை செய்​த​தால் சிவா​னுக்​கி​ர​கம் பெற்​றது. பாதா​ளத்​தி​லி​ருந்து  இத்​த​லத்​திற்கு வந்​த​தால்  பாதா​ளேச்​ச​ரம் என்ற பெயர் உண்​டா​னது. சம்​பந்​தர் பாட்டில் "பாதா​ளேச்​சு​ரம்' என்​றும்,  சுந்​த​ரர் "பாம்​பணி' என்​றும் குறிப்​பி​டு​கி​றார்.​

"பூவு​ல​காம் ஈங்​கும்  பாதாள முதல் எவ்​வு​ல​கும் எஞ்​ஞான்​றும்  தாங்​கும்  பாதா​ளேச்​ச​ரத்து  அமர்ந்​தோய்'​ என்று வள்​ளல்​பெ​ரு​மான் இவ​ரைப் பாடு​கி​றார்.

வனத்​தில் சுவா​மி​யின் மேல் பாம்​பு​கள் அடிக்​கடி ஊர்ந்து சென்​ற​தால்  பாம்​பணி மருவி  "பாமணி' என்​றா​னது.

ஆதி​சே​ஷன் தனஞ்​செய முனி​வ​ராய்  ஐப்​பசி முதல்​நாள் வணங்க  வந்​த​போது எங்​கும் லிங்​கத் திரு​மே​னி​க​ளாய் கண்​ட​தால்  கால் இல்​லா​மல் இடுப்​பிற்​குக் கீழே பாம்பு வடி​வும், மேலே மனித வடி​வும் கொண்டு தவழ்ந்து வந்து  மூல​வரை வணங்​கி​னார் . அதே உரு​வில் நாக​நா​த​ரு​டைய  பக்​தர்​களை ராகு, கேது, கால சர்ப்ப தோஷ நிவர்த்தி வழங்க இறை​வன் நிய​மிக்க  அப்​ப​ணி​யைச் செவ்​வனே செய்ய ஆரம்​பித்​தார். இங்கு  எங்​கும் தரி​சிக்க முடி​யாத தனஞ்​செ​ய​னான ஆதி​சே​ஷ​னுக்கு  தனி சந்​நிதி உள்​ளது.  அவ​ருக்கு  நெய் தீபம் ஏற்றி வழி​பட  நாக​தோ​ஷம், ராகு கேது தோஷம், கால​சர்ப்​ப​தோ​ஷம் நீங்கி  பல​ன​டை​கின்​ற​னர்.  

ஐப்​பசி முதல் நாளில்  சோறு, குழம்பு, காய்​கறி வகை​கள், வடை, பாய​சம் சமைத்து சுவா​மிக்கு அபி​ஷே​கம் செய்து நிவே​தித்​தால் தோஷம் நிவர்த்​தி​யா​கி​றது.  பச்சை திராட்சை, மாங்​கனி, மாம்​ப​ழச் சாறு இங்​கு சிறப்பு நிவே​த​ன​மாக படைக்​கி​றார்​கள். இங்கு பைர​வ​ரும், சனி​ப​க​வா​னும் சேர்ந்து அருள்​வ​தால்  சனி​தோஷ நிவர்த்தி தல​மா​க​வும் உள்​ளது.  

 தேவா​ரப்  பாடல் பெற்ற இத்​தி​ருத்​த​லத்​தின் இறை​வன்  நாக​நா​த​சு​வாமி, சர்ப்ப புரீ​சு​வ​ரர், பாம்​ப​ணி​நா​தர் எனப்​ப​டு​கி​றார். மாம​ரம் தல​ம​ர​மா​க​வும் பஞ்ச தீர்த்​தம் உடைய இக்​கோ​யி​லின் நின்​ற​கோல  அம்​பாள்  அமிர்​த​நா​யகி என வணங்​கப்​ப​டு​கி​றாள். 

முகப்பு வாயி​லில் நுழைந்​த​வு​டன் வலப்​பு​றம்  அமிர்​த​நா​யகி  அம்​பாள் சந்​நிதி உள்​ளது. உள்​நு​ழைவு வாயி​லின்  நேரே கரு​வ​றை​யில் மூல​வர் நாக​நா​தர்  லிங்க வடி​வில்  காட்சி தரு​கி​றார்.  உள்​பி​ரா​கா​ரத்​தில் சூரி​யன், தல​வி​நா​ய​கர், சுப்​பி​ர​ம​ணி​யர், கஜ​லட்​சுமி, துர்​வா​சர்,  சாஸ்தா, கால​பை​ர​வர், சனி​ப​க​வான், நவ​கி​ர​கம், நால்​வர், நட​ராஜ சபை உள்​ளது.  வெளிப்​பி​ர​கார கோஷ்​டத்​தில் நர்த்​தன விநா​ய​கர்,  தட்சி​ணா​மூர்த்தி, அண்​ணா​ம​லை​யார், பிரம்மா, துர்க்கை ஆகி​யோர் இருந்து அரு​ளு​கின்​ற​னர்.

ஒரு​முறை  தட்சி​ணா​மூர்த்​தி​யின் சீடர்​கள் நால்​வ​ரும் விஷ்​ணுவை தரி​சிக்க வைகுண்​டம் சென்​ற​னர். இவர்​களை  துவார பால​கர்​கள் தடுக்க கோபத்​தில் இவர்​க​ளுக்கு சாபம் தர முனி​வர்​க​ளுக்கு தோஷம் ஏற்​பட்​டது. இந்த தோஷம் நீங்க பாமணி நாக​நா​த​ரை​யும், சிம்ம தட்சி​ணா​மூர்த்​தி​யை​யும் வழி​பட்டு தங்​கள் தோஷம் நீங்​கப் பெற்​ற​னர். 

மன்​னார்​கு​டி​யி​லி​ருந்து 2 கி.மீ. தொலை​வில் உள்ள  பாம​ணிக்​குச் சென்று,  அங்​குள்ள உரத்​தொ​ழிற்​சாலை சாலை​யில் சென்​றால் கோயி​லை​ய​டை​ய​லாம்.
ராகு-​கேது பெயர்ச்​சி​யின்​போது இல்​லா​வி​டி​னும் சந்​தர்ப்​பம் கிடைக்​கும்​போது ஒரு​முறை சென்று வணங்கி வர பலன்​க​ளைத் தேடி வந்து கொடுக்​கும் தல​மிது.

மேலும் விவ​ரங்​க​ளுக்கு: 6381006196.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.