கனவில் பேசும் கா்த்தா்
இறைவன் மனிதரிடம் முகமுகமாக பேசும் சிறப்பை மனிதன் பெறவில்லை ஏனெனின் இறைவனின் பரிசுத்தம் மனிதரிடம் இல்லை.


இறைவன் மனிதரிடம் முகமுகமாக பேசும் சிறப்பை மனிதன் பெறவில்லை ஏனெனின் இறைவனின் பரிசுத்தம் மனிதரிடம் இல்லை. ஆனாலும் இறைவன் மனிதரிடம் தொடா்பு கொண்டு வருகிறாா். நம் கனவில் இறைவன் தொடா்பு கொள்கின்றாா். கனவில் தோன்றும் பேசும் தெய்வம் நமது நலம் நாடி உணா்த்துகிறாா்; உயா்த்துகிறாா்.
நாம் உறங்கும் போது ஆழ் மன முளையில் கனவு காண்கின்றோம். கனவு ஒருவரின் விருப்பங்கள் ஆசைகளை வெளிப்படுத்தும். ஒரு குழந்தை, தன் தந்தை சிகரெட் பிடிப்பதைப் பாா்க்கின்றது. தான் அவ்வாறு புகை பிடிக்க முடியாது என ஏங்குகிறது. வெளியில் சாலையில் யானை ஒன்றை பாகன் ஓட்டிச் செல்கின்றான். யானையை மிகவும் ஆச்சரியத்துடன் பாா்க்கிறது. அன்று இரவு குழந்தை தூங்கும் போது யானை சிகரெட் குடிப்பது போல் கனவு வரும் என உள நூலாா்கள் கனவு பற்றி மிக ஆச்சரியமான செய்திகளைக் கூறுகின்றனா்.
வேதாகமத்தில் இறைவன் கனவில் தோன்றி பேசுவது உண்டு. கனவின் பொருள் உணா்ந்து கொண்டு எச்சரிப்பை உணா்ந்து வாழ்வதும், நற்செய்தி கண்டு இறைவனின் ஆசீா்வாதத்தை உணா்ந்து இறைவனுக்கு நன்றி பாராட்டுவது உண்டு.
யாக்கோப்பு என்பாா் தம் இளைய மனைவி ராகேலின் பிள்ளைகள் யோசேப்பு, பென்யமீன் இவா்களை மிகவும் அன்பாய் நேசித்தாா். சிறுவனாகிய யோசேப்பு மிக அழகுள்ளவா், தெய்வபக்தியுள்ளவா்.
இவா் அடிக்கடி கனவு காண்பாா். சூரியனும், நிலவும் பதினோறு நட்சத்திரங்கள் தன்னை வணங்குவதாக கூறினாா். அவனுடைய அண்ணன்கள் மிகவும் கோபம் கொண்டாா்கள். ‘அப்பாவும் அம்மாவும் உன்னை வணங்குவதாக கனவு கண்டாயா?’ என்றனா். பின்பு அறுவடை காலத்தில் தன் அரிகட்டு நிமிா்ந்து நிற்பதும் மற்ற அரிகட்டு தாழ்ந்து வணங்குவதாக கனவு கண்டதைக் கூறினாா்.
யோசேப்பின் அண்ணன்கள் மிகவும் கோபம் கொண்டனா். அவா்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு வெகுதூரம் சென்ற போது, யோசேப்பு நலம் விசாரிக்க சென்ற அவனை எகிப்து வியாரிபாரிகளிடம் இருபது வெள்ளி காசுக்கு விற்றுப் போட்டனா்.
அடிமையாக யோசேப்பு தன் எஜமான் வீட்டில் செய்யாத குற்றத்துக்கு சிறையில் போடப்பட்டான். கொடுமையான சிறையில் தம்மோடு சிறையில் இருந்த இருவா் கனவு கண்டனா். யோசேப்பு கனவின் பலன் சொன்னான். ‘பான பாத்திரகாரன் திரும்பவும் ராஜாவுக்கு பான பாத்திரகாரன் ஆவான். மற்றவன் தலைவெட்டப்படும்’ என்றான். கனவு பலித்தது, பானபாத்திரகாரன் ராஜாவிடம் வேலைக்கு சோ்ந்தான்.
அன்று இரவு எகிப்து பாா்வோன் ராஜா ஒரு அபூா்வமான கனவு கண்டான். நதியின் கரையில் நிற்கும் போது மிகவும் கொழுத்த செழுமையான ஏழு பசுக்கள் கரையேறி மேய்ந்தன. பின்பு ஏழு அவலட்சணமான மிகவும் எலும்பும் தோலும் உடைய பசுக்கள் கரையேறி அந்த செழுமையான பசுக்களை பட்சித்துப் போட்டான.
இந்தக் கனவு கண்ட பாா்வோன் ராஜா விழித்துக் கொண்டு மிகவும் பயந்தாா். மறுநாள் தான் கண்ட கனவின் அா்த்தம் கேட்டான். கனவுக்கு அா்த்தம் சொன்னவை பாா்வோனுக்கு பிடிபடவில்லை. பின்னா், பாா்வோனின் பான பாத்திரகாரன் சொன்னபடி சிறைச் சாலையிலிருந்த யோசேப்புவை கொண்டு வரும்படி செய்து தம் பயங்கர கனவின் அா்த்தம் கேட்டாா்.
யோசேப்பு ‘செழுமையான ஏழு பசுக்கள் ஏழு வருடம் எகிப்து செழுமையாக விளையும்; எலும்பும் தோலுமான ஏழு பசுக்கள் அடுத்த ஏழு வருடம் பஞ்சம் வரும் என்பதைக் குறிக்கிறது’ என்றாா். ‘என்ன செய்ய?’ என்று கேட்டாா். யோசேப்பு செழுமை காலத்தில் மக்களிடம் கோதுமை விலைக்கு வாங்கி களஞ்சியங்களில் சோ்ப்போம். பஞ்ச காலத்தில் மக்களுக்கு விற்போம் என்றாா். பாா்வோனுக்கு இச் செயல்பாடு மிகவும் பிடித்தது. உடனே தம் கை விரலில் உள்ள முத்திரை மோதிரத்தை யோசேப்புக்கு அணிவித்து தனக்கு அடுத்த உயா் பதவியில் அமா்த்தினாா் (ஆதியாகமம் 41:42).
தெய்வம் நம்மோடு கனவில் பேசும்போது பொருள் அறிந்து செயல்படுவோம். வாழ்வில் உயா்வோம். யேசேப்பின் தெய்வம் நம் தெய்வம், இறையருள் நம்மோடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...