தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பலன் தரும் பரிகாரத் தலங்கள்

கரூர் அருகே உள்ள நெரூர் அக்னீஸ்வரர் கோயிலில் சதாசிவ பிரும்மேந்திரர் ஜீவசமாதி உள்ளது. சூரபத்மனைக் கொன்ற தோஷத்தை நீக்க முருகப்பெருமான் வழிபட்ட தலம் என்பது ஐதீகம்.

News image
Updated On :11 செப்டம்பர் 2020, 12:30 am

ஆர்.விஜயலட்சுமி


கரூர் அருகே உள்ள நெரூர் அக்னீஸ்வரர் கோயிலில் சதாசிவ பிரும்மேந்திரர் ஜீவசமாதி உள்ளது. சூரபத்மனைக் கொன்ற தோஷத்தை நீக்க முருகப்பெருமான் வழிபட்ட தலம் என்பது ஐதீகம். இங்குள்ள அக்னீஸ்வரரை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ளது திருநாரையூர். இங்கு திரிபுரசுந்தரி சமேத சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இங்குள்ள பொல்லாப்பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாகத் தோன்றியவர். இவரை வேண்டிக் கொண்டால் வெளிநாடு செல்வதில் உள்ள தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் உள்ளதைப்போல விநாயகருக்கும் உண்டு. அதில் முதன்மையானது திருநாரையூர். மற்ற ஐந்து தலங்கள்: திருவண்ணாமலை, திருமுதுகுன்றம், திருக்கடவூர், மதுரை, காசி ஆகியவை
யாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.