மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் (28/05/2021)

"பல்வேறு ஜாதிகள் உண்டு'' என்று சொல்கிறார்கள். ஆனால், இறைவன் ஓர் உடலில்தான் தங்குகின்றானா? இல்லையே! இறைவனுக்கு இந்த ஜாதி வேறுபாடுகள் இல்லை.

News image
Updated On :28 மே 2021, 11:18 am

• நற்செயல்களில் ஈடுபடுபவனுக்கு உலகம் முழுவதும் சுகம் நிரம்பியிருக்கிறது. கடல் விரும்பாவிட்டாலும் நதிகளெல்லாம் கடலில் விழுகின்றன. அதுபோல் அறவழியில் நடப்பவர்களிடம் சுகமும் செல்வமும் அழைக்காமலே வந்தடைகின்றன.
-துளசி ராமாயணம்
• ஸ்ரீ பாஷ்யத்தை (பிரம்ம சூத்திரத்தை) அர்த்தத்துடன் முறையாகக் கற்க வேண்டும், கற்பிக்க வேண்டும். அது முடியா விட்டால் நம்மாழ்வாருடைய திருவாய்மொழியை அர்த்தத்துடன் கற்க வேண்டும், கற்பிக்க வேண்டும். அதுவும் முடியாவிட்டால் பகவான் கோயில் கொண்டிருக்கும் திவ்ய தேசங்களில் வசித்து, பகவானுக்குத் தொண்டு செய்தல், ஏழைகளுக்கு உதவி செய்தல் போன்ற சத்காரியங்களில் ஈடுபட வேண்டும்.
-ஸ்ரீ ராமானுஜர்
• "பல்வேறு ஜாதிகள் உண்டு'' என்று சொல்கிறார்கள். ஆனால், இறைவன் ஓர் உடலில்தான் தங்குகின்றானா? இல்லையே! இறைவனுக்கு இந்த ஜாதி வேறுபாடுகள் இல்லை.
-கொங்கணச் சித்தர்
• முக்தி அடைவதற்கு வாயிலாக மனித சரீரம் இருக்கிறது. இந்த மானிட சரீரத்தை அடைந்திருந்தும், உலக வாழ்க்கையில் பற்று கொண்டிருப்பவன் உயர்ந்த பதவியிலிருந்து கீழே விழுந்தவனுக்கு ஒப்பானவன்.
-ஸ்ரீமத் பாகவதம் 1-7-74.
• முனிவர்களாலும் மற்றவர்களாலும் ஸ்ரீ ராமருக்கு பழங்கள் அளிக்கப்பட்டன. அந்தப் பழங்கள் "சபரியின் பக்தி' என்ற அமுதில் ஊறிய பழங்களின் இனிமையை அடையவில்லை. 
-துளசிதாசர் இயற்றிய "வினய பத்ரிகா'.
• நாம், "சாயங்கால நேரத்தில் பகவானைத் தியானம் செய்வது' என்று கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டும். அந்தக் கங்கணம், தோஷங்களாகிய தீமைகள் நம்மை நெருங்காமல் தடுக்கும்.
-இந்துமதம்
• நாம் நல்லவர்களின் புத்திமதியைக் புறக்கணித்து, துஷ்டர்களின் யோசனையைப் பின்பற்றுகிறவன் உயிரைக் காப்பாற்ற முடியாது. அவன் கண்டதைத் தின்னும் நோயாளியைப் போன்றவன்.
-பஞ்ச தந்திரம்
• யாரிடமும் சென்று ஒரு பொருளை பிச்சை கேட்காதே. எந்த விதமான பற்றும் உன்னை ஆட்கொள்ளாமல் பார்த்துக்கொள். ஆனால், சிவபெருமான் மீது மட்டும் பற்றுகொண்டு, அவனை அடையும் வழியிலிருந்து திரும்பாதே..!
-கடுவெளிச் சித்தர்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.