பாலாரிஷ்ட தோஷம்!
ஜோதிடத்தில் சுபகிரகங்கள் என்ற வரிசையில் குரு, சுக்கிர பகவான்கள் முதன்மை நிலையில் நிற்கின்றனர். ஒருவர் சுகபோக வாழ்க்கையில் நன்றாக வாழ்கிறார் என்றால் இந்த இரு கிரகங்கள் முக்கிய பங்கேற்கின்றன.


ஜோதிடத்தில் சுபகிரகங்கள் என்ற வரிசையில் குரு, சுக்கிர பகவான்கள் முதன்மை நிலையில் நிற்கின்றனர். ஒருவர் சுகபோக வாழ்க்கையில் நன்றாக வாழ்கிறார் என்றால் இந்த இரு கிரகங்கள் முக்கிய பங்கேற்கின்றன.
ஒரு ஜாதகத்தைப் பார்த்த மாத்திரத்தில் செவ்வாய், ராகு, கேது பகவான்கள் லக்னத்திற்கோ ராசிக்கோ சந்திர பகவான் 4, 7, 8 }ஆம் இடங்களில் நின்று விட்டால் "பாலாரிஷ்ட தோஷம்' (குழந்தையிலேயே கண்டம் என்பதற்கு இந்தப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது) இருப்பதாகக் கூறுவார்கள்.
பாலாரிஷ்ட தோஷம் என்றால் பன்னிரண்டு வயதிற்குள்ளாகவே கண்டங்கள் ஏற்படுவது. ஜாதக அலங்கார நூல் இப்படி குழந்தை நான்கு ஆண்டுகளுக்குள் இறந்துவிட்டால் தாய் செய்த முன்வினையாலும், எட்டு ஆண்டுகளுக்குள் இறந்துவிட்டால் தகப்பன் செய்த முன்வினையாலும், எட்டு முதல் பன்னிரண்டு ஆண்டுகளில் இறந்து விட்டால் குழந்தை செய்த முன் வினையாலும் பாலாரிஷ்ட தோஷத்தால் இறந்து விட்டதாகக் கருத வேண்டும்.
இதுதான் பாலாரிஷ்ட தோஷ விதி என்றாலும், முதலில் சுப கிரகங்கள் என்று சொல்லப்பட்ட குருபகவானும், சுக்கிர பகவானும் கேந்திரம் என்று சொல்லப்படும் நான்காம் இடத்தில் நின்று விட்டால் பாலாரிஷ்டம் என்று சொல்லப்படும் தோஷம் உடைபடுகிறது. ஆகவே, குழந்தைக்கு ஆயுள் நிரம்ப உண்டு என்று பொருள்படும். இதுபோலவே ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொரு கிரகங்களால் கருத்து மாறுபடுகிறது.
பொதுவாக பாலாரிஷ்ட தோஷம் இருக்கும் குழந்தைகளுக்கு வருடாவருடம் குழந்தைகள் பிறந்த திதி, நட்சத்திரம் அன்று ஆயுஷ்ய ஹோமம் செய்வது வழக்கமான பரிகாரமாக உள்ளது. சில அந்தணர்கள் குழந்தையின் ஏழு வயது முடிவதற்குள் அதாவது கர்ப்பத்திலிருந்து எட்டு வயது முடிவதற்குள் பூணூல் சடங்கு செய்து காயத்ரி ஜெபம் செய்வதற்கான தகுதியை உண்டாக்கி விடுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...