கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வரம் வழங்கும் வள்ளல்

பழனி அடிவாரத்தில் அருள்மிகு குழந்தைவேலாயுத சுவாமி, பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் கருணைமிகு வள்ளலாக எழுந்தருளுகிறார்

News image
Updated On :5 டிசம்பர் 2025, 12:16 pm

பொ. ஜெயசந்திரன்

அருணகிரிநாதரால் பாடல்பெற்ற பெருமைமிக்கது திருஆவினன்குடி. பழனி மலை அடிவாரத்தில் உள்ள இந்தக் கோயிலே இப்புராதன தலத்தின் ஆதிகோயிலாகும். இத்தலத்தை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படையில் முருகனின் மூன்றாம் படை வீடாகப் போற்றியுள்ளார்.

திருமகளும், காமதேனுவும், ஆதவனும், நிலமகளும், அக்கினிக் கடவுளும் இத்தலத்துக்கு வந்து இங்கே எழுந்தருளியுள்ள திருமுருகனை வழிபட்டதால், "திருஆவினன்குடி' என்னும் தெய்வீகத் திருப்பெயர் ஏற்பட்டதாகவும், இத்திருப்பெயர் சொன்ன அளவிலேயே முக்திப்பேறு நல்கும் மேலான சிறப்பை உடையது எனவும் பழனி தலபுராணம் கூறுகிறது. திருஆவினன்குடி திருமுருகனை தேவர்களும் முனிவர்களும் வழிபட்டு தங்களின் குறைதீர்த்துக் கொண்டனர்.

மேற்கு நோக்கி அமைந்துள்ள கோயிலில் முருகன் மயில் மீது அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமி என்ற பெயருடன் தம்மைச் சிந்தித்துப் போற்றி வணங்கி வழிபடுவோருக்கு வேண்டும் வரம் வழங்கும் வள்ளலாக எழுந்தருளியுள்ளார். இம்மை நலத்தையும், மறுமை நலத்தையும், வீடுபேற்றினையும் வழங்கிக் காத்தருளும் கருணைக் கடலாக, கண்கண்ட தெய்வமாகத் திகழ்கின்றார். இதனை அருள்ஞானப் பரம்பரையில் தோன்றிய நக்கீரர், அருணகிரியார், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் போன்ற அருளாளர்களின் அருள்வாக்கால் அறிகிறோம்.

கோயிலின் வடகிழக்குப் பகுதியில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. பழனி முருகனை வழிபட வரும் பக்தர்கள் திருஆவினன்குடி முருகனை வழிபட்ட பிறகு மலைக்குச் செல்லும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இங்கு பங்குனி உத்திரத் திருவிழா திருத்தேரோட்டத்துடன் விமர்சையாக நடைபெறுகிறது.

அண்மையில் அருள்மிகு குழந்தைவேலாயுத சுவாமி சந்நிதி மற்றும் திருச்சுற்று தெய்வங்களின் சந்நிதிகள் அழகுறத் திருப்பணி செய்யப்பட்டு பொலிவு பெற்றுள்ளது. இக்கோயிலில் டிசம்பர் 8}ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.