ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டுமென்று ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐ.நா. சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்று ஐ.நா.வுக்கான இந்திய துணைத் தூதர் மன்ஜீவ் பூரி பேசியது:
அல்-காய்தா, தலிபான், லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டுதான் செயல்படுகின்றன.
பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் அங்கு பயங்கரவாத செயல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கடந்த இரு மாதங்களில் ஆப்கானிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இந்த பயங்கரவாதச் செயல்களை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆப்கானிஸ்தான் அரசிடமே அந்நாட்டு பாதுகாப்பு தொடர்பான முழுப் பொறுப்பையும் ஒப்படைப்பது முழுமையானதாக இருக்க வேண்டும். அந்நாட்டில் பாதுகாப்பான சூழல் நிலவுவதையும், மனித உரிமைகள் காக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். அங்கு வளர்ச்சியை ஏற்படுத்துவதிலும், நிர்வாகத்தை சீராக்குவதிலும் சர்வதேச சமூகம் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.
பிறநாடுகளின் உதவிகள் இன்றி சிறப்பாக செயல்பட முடியாது என்ற நிலையில்தான் ஆப்கானிஸ்தான் இப்போது உள்ளது என்று அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அறிவார்ந்த சென்னை ரசிகர்கள்..! தோல்வியிலும் நெகிழ்ச்சியாகப் பேசிய கொல்கத்தா ரசிகர்!

தவெக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தி நகரில் விஜய் சாலை வலம்!

”நா மாட்டிக்கிட்டேன்னு இவ்ளோ கேள்வியா?” செய்தியாளர்களுக்கு பதிலளித்த ஆனந்த்! | TVK

பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

