விமான நிலைய கட்டுமானம், பராமரிப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்த மாலத்தீவு அரசிடம் ரூ.7,700 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளது இந்திய கட்டுமான நிறுவனமான ஜிஎம்ஆர்.
இது தொடர்பான மனு, சிங்கப்பூர் நீதிமன்றத் தீர்ப்பாயத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. தங்கள் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட 25 ஆண்டுகால ஒப்பந்தத்தை தவறான முறையில் மாலத்தீவு அரசு ரத்து செய்துவிட்டதாகவும் ஜிஎம்ஆர் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை நம்பி தாங்கள் மேற்கொண்ட செலவுகள், பிற நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம், அதற்கு அளிக்க வேண்டிய நஷ்டஈடு என தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக சுமார் 75 பக்க அறிக்கையை நீதிமன்றத் தீர்ப்பாயத்தில் ஜிஎம்ஆர் தாக்கல் செய்துள்ளது.
மாலத்தீவு அதிபராக முகமது நஷீத் பதவி வகித்தபோது, மாலேயில் உள்ள சர்வதேச விமான நிலைய கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்தை ஜிஎம்ஆர் பெற்றது. ஆனால் முகமது வாஹித் மாலத்தீவு அதிபரான பின் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தி நகரில் விஜய் சாலை வலம்!

”நா மாட்டிக்கிட்டேன்னு இவ்ளோ கேள்வியா?” செய்தியாளர்களுக்கு பதிலளித்த ஆனந்த்! | TVK

பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!

புரசைவாக்கம் செல்லாமல் திரும்பிய விஜய்! பிரசாரம் பாதியில் ரத்து!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

