திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கைதிகளின் விடுதலைக்கு உதவி வரும் இந்தியர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு சிறைகளில் உள்ள வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த கைதிகளின் விடுதலைக்கு இந்திய வர்த்தகர் ஒருவர் உதவி வருகிறார்.

Updated On :1 ஜூலை 2013, 10:55 pm

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு சிறைகளில் உள்ள வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த கைதிகளின் விடுதலைக்கு இந்திய வர்த்தகர் ஒருவர் உதவி வருகிறார்.

இதுவரை 3,700 கைதிகள் விடுதலைக்கு அவர் உதவி புரிந்துள்ளார். அவரது பெயர் ஃபிரோஸ் ஜி.மெர்ச்சன்ட். மும்பையைச் சேர்ந்த இவர் 1989-ல் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றார். அங்கு தங்க ஆபரணக் கடை வைத்திருக்கும் அவர், சிறைக் கைதிகளின் நிலைமையை அறிந்து அவர்களின் விடுதலைக்கு தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்.

அங்கு வேலைக்குச் சென்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், அங்குள்ளவர்களிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமை; கார் லோன் நிலுவை, வீட்டு வாடகை பாக்கி, கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாமை போன்ற காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான அந்த தொகையை ஃபிரோஸ் செலுத்தி அவர்களை சிறைகளில் இருந்து விடுவித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை 3,700 பேரை விடுவித்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் 500 பேருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த வகையில் இதுவரை ரூ.6 கோடி அளவுக்கு செலவு செய்திருக்கிறார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 1000 கைதிகளின் கடன்களை தீர்த்து, அவர்களை விடுவித்து, சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க தான் திட்டம் வைத்திருப்பதாக கூறுகிறார் ஃபிரோஸ்.

மேலும் அவர் கூறுகையில், கடன் போன்ற பிரச்னைகளினால் சிறைக்குச் சென்றவர்களுக்கு மட்டுமே நான் உதவி செய்கிறேன். கொலை, பாலியல் பலாத்காரம், போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்காக சிறைக்குச் சென்றவர்களை, வெளியே கொண்டுவர இதுவரை முயன்றது கிடையாது. அப்படிப்பட்டவர்களுக்கு ஒருபோதும் உதவிசெய்ய மாட்டேன் என்றார் ஃபிரோஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.