ஆப்பிள் நிறுவனம் தயார் செய்த முதல் கம்ப்யூட்டர், ரூ. 2.32 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் வோஸ்நியாக்கினால் 1976-ம் ஆண்டு ஆப்பிள்-1 கம்ப்யூட்டர் தயாரிக்கப்பட்டது.
இந்தக் கம்ப்யூட்டரின் "மதர்போர்டு' மரத்தில் பொருத்தப்பட்டிருந்தது. இதில் வோஸ்னியாக், தனது கையெழுத்திட்டிருந்தார்.
இக்கணினி, லண்டனில் உள்ள கிறிஸ்டீஸ் ஏல நிறுவனத்தின்மூலம் இணையத்தின் வழியாக ஏலம் விடப்பட்டது. இது, ரூ. 2.32 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஏலம் எடுத்தவர் குறித்த விவரம் தெரியவில்லை.
ஆப்பிள்-1 வடிவில் தயார் செய்யப்பட்ட முதல் 25 கம்ப்யூட்டரில் தற்போது ஏலத்தில் விடப்பட்ட கம்ப்யூட்டர் முதலாவதாக உருவாக்கப்பட்டதாகும். அதன் வரிசை எண் 01-0025.
ஆப்பிள்-1 கம்ப்யூட்டரை அடிப்படையாக வைத்து ஆப்பிள்-2 கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் கம்ப்யூட்டர் தயாரிப்பில் பெரும் புரட்சி ஏற்பட்டது. தற்போது சர்வதேச அளவிலான விற்பனையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் முன்னணி வகிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


