கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 4 பேர் சாவு

பாகிஸ்தானின் கராச்சி நகரில் நிகழ்ந்த இருவேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.

Updated On :21 ஜூலை 2013, 7:49 pm

பாகிஸ்தானின் கராச்சி நகரில் நிகழ்ந்த இருவேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.

கராச்சி மாநகராட்சி ஆணையரின் வாகனத்தை குறிவைத்து சனிக்கிழமை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டை வைத்த பயங்கரவாதிகள், ஆணையரின் கார் அந்த வழியாக கடந்து சென்றபோது அதனை வெடிக்கச் செய்தனர். இதில் ஆணையருடன் பாதுகாப்புக்குச் சென்ற 8 போலீஸôர் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மற்றொரு சம்பவத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் குண்டு வெடித்தது. அங்குள்ள வீடு ஒன்றில் 4 பயங்கரவாதிகள், வெடிகுண்டை தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது குண்டு வெடித்துச் சிதறியது. இதில் 3 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.