/

"கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதில் ராணுவம் வெற்றி பெறும்'

சிரியாவில் நிகழ்ந்து வரும் உள்நாட்டுப் போரில் ராணுவம் வெற்றி பெறுவது உறுதி என்று அதிபர் பஷார் அல் - அஸாத் தெரிவித்தார்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2013, 6:29 pm

சிரியாவில் நிகழ்ந்து வரும் உள்நாட்டுப் போரில் ராணுவம் வெற்றி பெறுவது உறுதி என்று அதிபர் பஷார் அல் - அஸாத் தெரிவித்தார். சிரியாவில் அதிபருக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க ராணுவம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ராணுவ தினத்தை முன்னிட்டு அதிபர் பஷார் அல் அஸாத் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:÷""ராணுவ வீரர்கள் மீதும், அவர்களின் செயல்பாடுகளின் மீதும் எனக்கு நம்பிக்கையுள்ளது. தேசத்தை காக்கும் கடமையை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன். பயங்கரவாதத்துக்கு எதிராக தைரியமாக போராடி வருகிறீர்கள். நவீன கால வரலாற்றில் உலகமே வியக்கும் அளவுக்கு பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள்'' என்றார்.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக டமாஸ்கஸின் கிழக்குப் பகுதியிலும், அலெப்போ நகரின் மேற்கு பகுதிகளிலும் ராணுவம் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக ஹாம்ஸ் நகரை கிளர்ச்சியாளர்கள் பிடியிலிருந்து ராணுவம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.