சிரியாவில் நிகழ்ந்து வரும் உள்நாட்டுப் போரில் ராணுவம் வெற்றி பெறுவது உறுதி என்று அதிபர் பஷார் அல் - அஸாத் தெரிவித்தார். சிரியாவில் அதிபருக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க ராணுவம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், ராணுவ தினத்தை முன்னிட்டு அதிபர் பஷார் அல் அஸாத் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:÷""ராணுவ வீரர்கள் மீதும், அவர்களின் செயல்பாடுகளின் மீதும் எனக்கு நம்பிக்கையுள்ளது. தேசத்தை காக்கும் கடமையை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன். பயங்கரவாதத்துக்கு எதிராக தைரியமாக போராடி வருகிறீர்கள். நவீன கால வரலாற்றில் உலகமே வியக்கும் அளவுக்கு பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள்'' என்றார்.
கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக டமாஸ்கஸின் கிழக்குப் பகுதியிலும், அலெப்போ நகரின் மேற்கு பகுதிகளிலும் ராணுவம் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக ஹாம்ஸ் நகரை கிளர்ச்சியாளர்கள் பிடியிலிருந்து ராணுவம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெள்ளோட்டம் வெல்லட்டும்

காலடியின் தடங்கள்

செம்பருத்தி தேநீர் பற்றி தெரியுமா?

நிழல்களுக்கு எதிராக கலையும் மர்மம்
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



