திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 பதிவான போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Updated On :8 நவம்பர் 2015, 2:36 pm

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 பதிவான போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

சுமத்ரா தீவின் சிபோலா நகரிலிருந்து தெற்கே 111 கிமீ தொலைவில் கடலுக்கு அடியில் 75 கிமீ ஆழத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மண்டலிங் மாவட்டத்தில் இந்த நில அதிர்வு 15 விநாடிகள் உணரப்பட்டதாக கூறிய இந்தோனேசிய வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி நிறுவன அலுவலர் முகமது ரியாதி, இதனால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றார். மேலும், சுனாமி குறித்த எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.