அகதிகள் விவகாரம்: மியான்மர் எல்லையில் சீன ராணுவம் கண்காணிப்பு அதிகரிப்பு!
உள்நாட்டு கலவரம் காரணமாக மியான்மரில் இருந்து அகதிகள் வந்து குவியும் விவகாரம் காரணமாக, சீனாவின் தெற்கு எல்லையில் ராணுவ கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


பீஜிங்: உள்நாட்டு கலவரம் காரணமாக மியான்மரில் இருந்து அகதிகள் வந்து குவியும் விவகாரம் காரணமாக, சீனாவின் தெற்கு எல்லையில் ராணுவ கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் அரசுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே உண்டான பிரச்சினையின் காரணமாக மக்கள் அகதிகளாக சீனாவின் தெற்கு எல்லையில் வந்து தஞ்சம் புகுவதுஅதிகரித்துள்ளது. சமீபத்திய தகவல்களிளின் படி, இவ்வாறு அங்கு வந்துள்ள சுமார் 3000 பேரை, எல்லைப்புற மாகாண அரசுடன் இணைந்து மறு குடியேற்றம் செய்ய சீன அரசு உதவியுள்ளது. ஆனால் இதனால் தங்களது நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உண்டாகலாம் என்று சீனா நினைக்கிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, ராணுவ செய்தித் தொடர்பாளர் யாங் யூஜுன், 'இது போன்ற பிரச்சினைகளை சமாளிக்க சீன மக்கள் ராணுவம் ரோந்து பணிகளை அதிகப்படுத்தியுள்ளது' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...