

டோக்யோ: ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு மன்னர் அகிஹிட்டோவை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்தியா - ஜப்பான் நல்லுறவு குறித்து ஜப்பான் நாட்டு மன்னர் அகிஹிடோவை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். இதை மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபேயுடனான சந்திப்புக்குப் பிறகு, மன்னர் அகிஹிட்டோவை சந்தித்தார்.
ஜப்ன் மன்னர் அகிஹிட்டோவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இந்தியா - ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான விஷயங்கள் இரு தலைவர்களும் ஆலோசித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.