மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தையில் கால் பதிக்கும் நோக்கியா!

உலகப்புகழ் பெற்ற அலைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியா ஸ்மார்ட்போன் தயாரிப்பில் மீண்டும் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

News image
Updated On :22 நவம்பர் 2016, 12:38 pm

DIN

புது தில்லி: உலகப்புகழ் பெற்ற அலைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியா ஸ்மார்ட்போன் தயாரிப்பில் மீண்டும் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பின்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த உலகின் புகழ் பெற்ற அலைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியா இரண்டு வருடங்களுக்கு முன்பு முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட்டுக்கு விற்கப்பட்டது. மேலும் பல்வேறு நாடுகளில் செய்யப்பட்டு வந்த அந்நிறுவனத்தின் அலைபேசி தயாரிப்பு தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் 'இரண்டு வருடங்களுக்கு போட்டியில்லை' என்ற நோக்கியாவின் ஒப்பந்தம் 2016-உடன் முடிவடைவதைத் தொடர்ந்து இந்நிறுவனம் மீண்டும் அலைபேசி தயாரிப்பில் இறங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெச் .எம்.டி குளோபல் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பில் நோக்கியா ஈடுபட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

2017-ஆம் ஆண்டில் ஸ்பெயினின் பார்சிலோனாவில் 'உலகலாவிய மொபைல் கூட்டமைப்பு' மாநாடு நடக்க உள்ளது.இந்த மாநாட்டில் நோக்கியா நிறுவன தலையை செயல் அதிகாரி ராஜிவ் சூரி உரையாற்ற உள்ளார். எனவே அந்த மாநாட்டில் நோக்கியா புதிய ஸ்மார்ட்போன்களை அறிவிப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மூன்று புதிய ஆண்டிராய்டு வகை ஸ்மார்ட் போன்களை நோக்கியா அறிமும் செய்யவுள்ளதாகவும்.அவற்றில் ஒரு போனுக்கு நோக்கியா D1C என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.