தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை; உருவாகும் சீர்திருத்த மையங்கள்: இது சீனா ஸ்பெஷல் !

சீன இளைஞர்களிடம் பெருகி வரும் ஆன்லைன் விளையாட்டுகளின் மீதான மோகத்தை கட்டுப்படுத்தும் வகையில், கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர சீன அரசு உத்தேசத்திருக்கிறது.

News image
Updated On :8 அக்டோபர் 2016, 10:15 am

DIN

பீஜிங்: சீன இளைஞர்களிடம் பெருகி வரும் ஆன்லைன் விளையாட்டுகளின் மீதான மோகத்தை கட்டுப்படுத்தும் வகையில், கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர சீன அரசு உத்தேசத்திருக்கிறது.

உலகத்திலேயே இணையதளங்களை பயன்படுத்துவோரில் சீனாவின் பங்கு மட்டும் 75 கோடியாகும்.  இவர்களில் 10 முதல் 39 வயதுகுட்டப்பட்டவர்கள் 74 சதவீதம் பேர். 10 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் 20 சதவீதம் பேராக உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் இணையதள பொழுதுபோக்கு சேவைகளில் ஆர்வம் செலுத்துகின்றனர். குறிப்பாக ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் செலுத்துகின்றனர். நாடெங்கும் பெருகி வரும் ஆன்லைன் விளையாட்டு மையங்களும் இதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளன..

இதனால் கவலை கொண்டுள்ள சீன அரசு, இதனை கட்டுக்குள் கொண்டு வர புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர உத்தேசித்துள்ளது.அதன்படி 18 வயதுக்கு குறைவானவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட தடைவிதிக்கப்பட  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இத்துடன் நில்லாமல் இதனால் பாதிக்கபப்ட்டுள்ளவர்களை மீட்க அவர்களுக்கு என்று தனி சிகிச்சை மையங்களை அமைக்கவும் அரசு ஆலோசித்து வருகிறது.

அத்துடன் சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டு மையங்களில் அடையாள எண்னை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவர்கள் தொடர்ந்து விளையாடும் நேரத்தை கட்டுக்குள் கொண்டு வரவும் அரசு திட்டமிடுகிறது. 

இதுகுறித்தும் அரசு பொது மக்களிடமும் கருத்துக்களை கேட்டு வருகிறது. ஆனால் அரசின் இந்த முயற்சிக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர்கள் தாங்கள் ஆத்திரத்தை சமூக வலைத்தளங்களில் வெளிபடுத்தி வருகின்றனர்.

இதற்கு முன்னர் 2007 ஆம் ஆண்டிலும் அரசு இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.