வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

ஈராக்கில் ஒரே வாரத்தில் 232 பேரைக் கொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்!

ஈராக்கில் அரசுக்கு எதிராக போராடி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், மொசூல் நகர் அருகே ஒரே வாரத்தில் 232 பேரை  கொலை செய்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:49 am

DIN

பாக்தாத்: ஈராக்கில் அரசுக்கு எதிராக போராடி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், மொசூல் நகர் அருகே ஒரே வாரத்தில் 232 பேரை  கொலை செய்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஈராக்கின் மொசூல் நகரத்தை ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்க அரசு படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் மொசூலுக்கு அருகே மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் கடந்த வாரம் அப்பாவி மக்கள் 232 பேரை பிடித்து சென்று ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்துள்ள  விபரம் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலக செய்தி தொடர்பாளர் ரவிணா ஷாம்தசானி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அவர்களில் 190 பேர் ஈராக் முன்னாள் படை அதிகாரிகள் ஆவார்கள். இந்த தகவலை  தெரிவித்தார்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் பற்றிய இறுதி எண்ணிக்கை இன்னும் அதிகமாகக்கூட இருக்கலாம். அதை உறுதிபடுத்த முடியவில்லை. மொசூல் நகரைப் தக்கவைத்து கொள்ள மக்களை மனித கேடயங்களாக ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர். மொசூல் நகரை சுற்றிஉள்ள மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரம் மக்கள்  கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளனர்

இப்பகுதியில் உள்ள மக்களை வெளியேறுமாறு ராணுவம் உத்தரவிட்டு உள்ளது, அதே சமயம் இதன்படி வெளியேறுபவர்களை ஐ .எஸ். தீவிரவாதிகள் கொன்று வருகிறார்கள்

இவ்வாறு ஷாம்தசானி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.